ஹதீஸ்_எப்படி புரிவது-1

ஆய்வுகள் | ஹதீஸ் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On May 14, 2015 Viewers: 2079


ஹதீஸ்_எப்படி புரிவது-1

 எண்ணமும் செயலும்!

உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள், செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன .ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தி படுத்துவதை ) நோக்கமாக கொண்டு அமைகிறதோ அவர் ஹிஜ்ரத் (தின் பலனும்) அவ்வாறே அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ஆதாயத்தை அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாக கொண்டுள்ளதோ அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாக தான் இருக்கும். (நூல் : புஹாரி 1,54,2529,5070)

இந்த நபிமொழி மூலம் ஒரு வணக்கத்தை அல்லது நற்செயலை அல்லாஹ்வின் திருப்திக்காக என்ற எண்ணத்துடன் செய்தால்தான் அதற்குரிய நன்மை கிடைக்கும் என்பதையும் உலக நன்மையையும் நோக்கமாக கொண்டு அவற்றை செய்தால் அவற்றுக்குரிய நன்மை கிடைக்காது என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

இந்த நபிமொழியில் நாம் புரிந்து கொள்ளக்கூடிய இன்னொரு விசயமும் இருக்கிறது. ஒரு தீமையை அதை செய்வதற்கு விருப்பமும் நாட்டமும் இன்றி நிர்பந்த சூழ்நிலையில் செய்தால் அதற்கு தீமை எழுதப்படாது. ஏனென்றல் செயல்கள் எல்லாம் எண்ணத்தைப் பொறுத்துதான் அவற்றுக்கான பிரதிபலன்கள் கொடுக்கப்படும். உதாரணத்திற்கு குர்ஆனில் சில பாவங்களைப் பேசும்போது அவற்றை நிர்பந்த சூழ்நிலையில் செய்துவிட்டால் குற்றமாகாது என்று அல்லாஹ் கூறுவதைப் பார்க்கலாம். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் மறுப்பவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் என்றும் அத்தகையவர்களுக்கு கடும் வேதனை உண்டும் என்றும் சொல்லும் அல்லாஹ் இறை நம்பிக்கையில் உள்ளம் அமைதி கொண்ட நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இறை நிராகரிப்பு வார்த்தையை சொல்லி விட்டால் குற்றமில்லை என்று அல்லாஹு தஆலா அனுமதி அளிக்கிறான். (பார்க்க அல்  குர்ஆன்16:106)

அதே போல் உண்ண தடை செய்ய பட்டவற்றை  நிர்பந்த சூழ்நிலையில் உண்டு விட்டால் பாவம் இல்லை என்றும் அல்லாஹ் கூறி உள்ளான். ( அல்குர்ஆன்  2 : 171)

அடுத்து, ஒரு பொதுவான செயல் எண்ணத்தைப் பொறுத்து எப்படி மறுமை நன்மை பெற்று தரக்கூடியதாகவும் பெற்று தராததாகவும் ஆகிறது என்பதையும் இங்கு நபியவர்கள் விளக்குகிறார்கள்.

குடி பெயர்தல்ஹிஜ்ரத்

                    ஹிஜ்ரத் என்பது அல்லாஹ்வுக்காகவும் நடக்கிறது சுய தேவைக்காகவும் நடக்கிறது. ஒரு சிற்றூரில் இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் பிற மதத்திலுள்ள சுற்றத்தார் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதற்காக சென்னையில் இஸ்லாமிய சூழலுள்ள ஒரு பகுதிக்கு வந்து குடியேறுகிறார். அதே சிற்றூரில் இருந்து இன்னொரு முஸ்லிம் அதே பகுதியில் தொழில் செய்வதற்காக வந்து குடியிருக்கிறார். இருவரும் ஒரே பகுதியில் இருந்து ஒரே பகுதிக்கு தான் ஹிஜ்ரத் செய்திருக்கிறார்கள். ஆனால் முதலாமவரின் நோக்கம் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக என்ற நிலையில் இருக்கிறது. அதற்கு சிறப்பான மறுமை நன்மை உள்ளது. இரண்டாமவரின் நோக்கம் உலக நன்மையை பெறுதல் என்ற நிலையில் உள்ளது .அவருக்கு அவர் எதிர் பார்க்கும் உலக நன்மை தான் கிடைக்கிறது. இந்த நபிமொழி படி வணக்க வழிபாடுகள் ஏற்கப்படுவதற்கு நிய்யத் எனும் எண்ணம் அவசியமாகும். நிய்யத் நடை பெற வேண்டிய இடம் நெஞ்சம் ஆகும். நிய்யத்தை வாயினால் மொழிவது நபிவழி அல்ல. ஹஜ்ஜு உம்ராவுக்காக நிய்யத் செய்யும் போது மட்டும் அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜ தன்  என்றும் அல்லாஹும்ம லப்பைக்க உம்ரத்தன் என்றும் நபி (ஸல் ) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இன்று சிலரிடம் நடைமுறையில் இருப்பது போல் இன்ன தொழுகையை இத்தனை ரக்காத்துகள் கிபுலாவை முன்னோக்கி என்று நிய்யத்து சொல்வது நபி மொழியில் இல்லை. மட்டுமின்றி இவர்கள் உருவாக்கியுள்ள இந்த வாசகங்களை அப்படியே மனதில் கொண்டு வரவேண்டும் என்பதும் இல்லை. மாறாக ஒரு வணக்கத்தை செய்ய ஆரம்பிக்கும் போது அந்த வணக்கத்தை செய்யும் நாட்டம் மனதில் இருப்பது தான் நிய்யத். தொழுகை ஜக்காத்து  நோன்பு உள்ளிட்ட வணக்கங்களுக்கும் நற்செயல்களுக்கும் இதுதான் நிலை.  ஆகவே வாயால் சொல்லும் பித்அத்தை நிய்யத்தை தவிர்க்க வேண்டும்.

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE