அழைப்பு கடிதம் (இந்துவுக்கு)

மதங்கள் | இந்து மதம் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Nov 24, 2013 Viewers: 2749


அழைப்பு கடிதம் (இந்துவுக்கு)

அருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருபெயரால்..

பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கான மாதிரி கடிதம்.

இறையருள் நிறைக!

நாம் மத நம்பிக்கை உடையவர்கள். நம்முடைய நம்பிக்கைகளில் பல வற்றிலே ஒற்றுமை இருப்பதை காண்கிறோம்.கடவுளைப் பற்றி எல்லாம் வல்ல இறைவன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.நாங்களும் அப்படியே கூறுகின்றோம்.

எந்தக் காரியத்தையும் நிறைவேற்றித்  தருவது அந்தக்  கடவுளின் செயல் என்பதைக் குறிக்க "எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்" என்று நாங்கள் நம்பிக்கையுடன் சொல்கிறோம்,நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள்.

நன்மை செய்வதற்கு கூலி கொடுப்பதற்காக சொர்கத்தையும் பாவத்திற்கு தண்டனை கொடுப்பதற்காக நரகத்தையும்  படைத்திருப்பதாக நீங்களும் நாங்களும் நம்புகிறோம்.

இப்படி பல்வேறு நம்பிக்கைகளில்   ஒற்றுமை உடையவர்களாய் இருகின்றோம்.ஆனாலும் வேறு பல நம்பிக்கைகளில் முக்கியமானவற்றை  பரிமாரிக்  கொள்வதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.

இறைவனை மட்டுமே  வணங்க வேண்டும்!

அனைத்தையும் படைத்தது ரட்சித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை  மட்டுமே வணங்க வேண்டும்.உயர்ந்த மனிதராக, சிலையாக இருந்தாலும் பிரம்மாண்ட பொருளாக இருந்தாலும் அவனல்லாத எவரையும்  எதனையும் வணங்க கூடாது என்பதே இஸ்லாத்தின்  அடிப்படை.

இது குறித்து இறைவன் தன் இறுதி வேதமாகிய திரு குர்ஆனில் கூறுவது  :

"மனிதர்களே  உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் படைத்த உங்கள் இரட்ச்ககனையே நீங்கள் வணங்குங்கள்.இதனால் (இறை தண்டனையிலிருந்து உங்களைநீங்கள் தற்காத்துக் கொள்ளலாம.அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான் வானிலிருந்து நீரை இறக்கி அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக வெளிபடுத்தினான்.எனவே (இதையெல்லாம்) அறிந்த நிலையில் இறைவனுக்கு நிகரானவர்களை ஏற்படுத்தாதீர்கள்."

(திரு குர் ஆன்:அத்தியாயம் 2 வசனம் 21-22)

எவரையும் அல்லது எதனையும் வணகுவது பலனற்ற செயல் என்பதை திரு குர் ஆன் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவதை பாருங்கள்!

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது .அதனை செவிதாழ்த்திக் கேளுங்கள்! இறைவனை அன்றி எவர்களை நீங்கள் (பிராத்தித்து) அழைக்கின்றீகளோ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூட அவர்களால் படைக்க முடியாது. அவர்களிடமிருந்து எதையேனும் பறித்து  கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது.தேடுபவரும் தேடப்படுபவரும் பலவீனப்பட்டவர்கள்.

(திரு குர் ஆன்:அத்தியாயம் 22 வசனம் 73)

வணக்கத்திற்கு   உரிமையாளனாக இறைவன் மட்டுமே இருக்கையில் மற்றவர்களுக்கு வணக்கத்தை செலுத்துவது இறைவனால் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.மோசமான வழிகேடுமாகும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.இது பற்றி இறுதி வேதமாகிய திரு குர்ஆனில் இறைவன் கூறுவது

தனக்கு இணைவைக்க படுவதை நிச்சயமாக இறைவன் மன்னிக்க மாட்டான்.அதுவல்லாத பாவத்தை தான் நாடியவருக்கு அவன் மன்னிப்பான்.எவர் இறைவனுக்கு இனைவைக்கின்றாரோ அவர் தூரமான வழி கேட்டில் வழி தவறி சென்றுவிட்டார்.

(திரு குர் ஆன்:அத்தியாயம் 4 வசனம் 116)

இறைத்தூதர்களின் போதனை!

இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்.வேறு எவரையும் வணங்க கூடாது என்ற கொள்கையை எடுத்துச் சொல்வதற்காகவே ஒவ்வொரு சமுதாயத்திலும் இறைவன் தூதர்களை அனுப்பி வைத்தான் இது பற்றி திருமறைக் குர்ஆனில் கூறபப்டுவது.

என் சமுதாயத்தினரே!இறைவனையே வணங்குங்கள் அவனைத் தவிர்த்து உங்களுக்கு வேறு தெய்வமில்லை என்று ஹூது தீர்க்க தரிசி (தன் சமுதாயத்திடம்) கூறினார்.

(திரு குர் ஆன்:அத்தியாயம் 11 வசனம் 50)

இவ்வாரே இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்ததாக திரு குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் :

தேவன் ஒருவனையே வணங்க வேண்டுமென மக்களுக்கு அழைப்பு விடுக்கவும் அவனை வணங்கி வழிபடும் முறையை போதிக்கவும் இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட தூதர்களில் இறுதியானவரும் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் அனுப்பப்பட்டவர் தான் நபிகள் நாயகம் முகம்மது(ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.இது இஸ்லாத்தின் மற்றொரு அடிப்படை நம்பிக்கை.இது பற்றி எல்லாம் வல்ல இறைவன் கூறுவது.

"(நபியே!) கூறுவீராகமக்களே நான் உங்கள் அனைவருக்குமான இறைவனின் தூதராவேன்.அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது"

(திரு குர் ஆன்:அத்தியாயம் 7 வசனம் 158)

நபிகள் நாயகம் முகம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நாம் ஏற்பதற்கு தகுதியான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தார்கள்.இறை பக்தியில் முன்னோடியாக இருந்தார்கள்.மற்றவர்களை விட அதிகமாக இறைவனை வணங்கி  துதிப்பவர்களாகவும் விளங்கினார்கள்.சொல்லும் செயலும் ஒன்றுபட்டவர்களாகவும்  நற்குணத்திர்க்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள்.

வசதி வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்த போதும் எளிய வாழ்கையை தேர்தெடுத்தார்கள்.தன் காலில் விழுந்து  பிறர் தனக்கு மரியாதை செய்வதையும்,தனக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்.

இறைவேதம் கொடுக்கப்பட்ட எந்த இறைத்தூதரும் செய்யாத சாதனையை அவர்கள் செய்திருப்பதும் உலகத்தில் அவர்கள் ஏற்படித்தி இருக்கும்  தாக்கமும்,அவர்கள் இறைவனின் உதவி பெற்ற நல்லடியார் என்பதற்கு சான்றாக உள்ளது.

இதுவரை இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களில் சிலவற்றை சுருக்கமாக எழுதியுள்ளேன்.கூடுதலான விவரங்களை திருக குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது மற்றும் இஸ்லாத்தை அறிந்தவர்களிடம் கேட்பது போன்ற வழிகளில் அறிந்து கொள்ளலாம்!

எல்லாம் வல்ல இறைவன் நம்மை சத்தியத்தின் வழியில் நடத்துவானாக!

 

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE