அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்!

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Feb 19, 2019 Viewers: 2831


அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்!

அத்தஹியாத் இருப்பில் சிலர்  விரலசைப்பதும் சிலர் அசைக்காமல் இருப்பதுமான நடை முறை உம்மத்தில் இருந்து வந்தது.

குர்ஆன் ஹதீஸ் வழியில் பிரச்சாரங்கள் செய்த ஷைக்  அல்பானி(ரஹ் ) அவர்கள் விரலை அசைப்பது நபிவழி என்று தவறுதலாக புரிந்து கொண்டு அதைப் பிரச்சாரமும் செய்தது தான் மக்கள் மத்தியில் அது  தீவிரமாக  பரவ காரணமானது. எவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் மனிதர் என்ற அடிப்படையில் சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான்.

அத்தஹியாத் இருப்பில் விரலசைப்பதற்கு காட்டப்படும் ஆதாரங்கள் பலவீனமானவை, சந்தேகத்துக்குரியவை என்பதற்கான ஆதாரங்களை தருகிறேன்.

விரலசைப்பதற்கு ஆதாரமாக காட்டப்படும் ஹதீஸ், நபி (ஸல்)
அசைத்ததை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) என்ற நபி தோழர் பார்த்ததாக
குறிப்பிடுகிறது. இந்த நபிமொழி, அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் பலவீனமான நபிமொழியாகும். அத்துடன் கருத்தும் மற்ற வலுவான ஆதாரங்களுக்கு ஒத்து வரவில்லை.

அறிவிப்பாளர் பிரச்சனை: ஒன்று

இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஆஸிம் பின் குலைப் என்ற அறிவிப்பாளர் பற்றி நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்த துறையில் சிறந்த அறிஞரான இமாம் இப்னுல் மதீனீ ,  “இவர் தனியாக அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள். (பார்க்க : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 5 பக்கம் :49)

இப்னுல் மதீனியின் கூற்றை வலுப்படுத்தும் விதமாகவே இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)அவர்களின் கூற்றும் அமைந்துள்ளது. இப்னு ஹஜர் அவர்கள், அறிவிப்பாளர் விமர்சகர்களான அறிஞர்கள் எல்லோருடைய கருத்தையும் எடுத்து வைத்து அலசி முடிவு சொல்பவர்.

இந்த ஆசிம் பின் குலைப் பற்றி இப்னு ஹஜர், ஸதூக் என்கிறார்கள். இந்த வார்த்தைக்கு உண்மையானவர் என்று அர்த்தம் இருப்பினும் ஒரு அறிவிப்பாளர் குறித்து இப்னு ஹஜர் இந்த வார்த்தையைச் சொன்னால் அவர் நம்பகமானவர் என்றாலும் மறதி அல்லது  கூட்டி குறைத்து சொல்லும் குறை அவரிடம் இருக்கும் என்பது தான் அதன் கருத்து.
(
தக்ரீபுத் தஹ்தீப்  பாகம் :2 பக்கம் : 286 )

இதை மெய்ப்பிக்கும் விதத்தில் அத்தஹிய்யாத் இருப்பு முறை பற்றிய மிகமிக ஆதரப்பூர்வமான நபி மொழிகளெல்லாம் இந்த அசைத்தல் இல்லாமல் இருக்கிறது.

அறிவிப்பாளர் பிரச்சனை: இரண்டு

இந்த அறிவிப்பாளர் தொடர் பிரச்சனையில் இன்னொரு குறையை சில அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது என்னவெனில் ஆஸிம் பின் குலைப் வழியாக இந்த நபி மொழியை அறிவிக்கும் பல அறிவிப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் எவரும் சொல்லாத இந்த அசைப்பு செய்தியை ஸாயிதா என்பவர் மட்டுமே சொல்கிறார்.

ஸாயிதா தரமான அறிவிப்பாளர் தான் என்றாலும் தன்னைப் போன்ற, ஆஸிமின் பல மாணவர்கள் அறிவிக்கும் செய்திக்கு வேறுபட்ட தகவலை சொல்லி இருப்பதால் இந்த செய்தி ஷாத் என்ற பலவீனமான நிலையை அடைகின்றது என்கின்றனர். இதைக் கூறும் சில அறிஞர்களின் கூற்றை கீழே தருகிறேன்.

) முஸ்னது அஹ்மது ஹதீஸ் எண் : 18890. இது அசைத்ததை பார்த்ததாக கூறும் ஹதீஸ். இதன் கீழ் அல்லாமா ஷுஐப்  அல்அர்னவூத் அவர்கள் குறிப்பிடுவது:
இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ். ஆனால் அதை அசைக்க நான் பார்த்தேன் என்னும் வாசகம் ஆதாரப் பூர்வமானதல்ல. ஏனெனில் அது ஷாத் வகையாகும். இதனை ஸாயிதா மட்டுமே தனியாக கூறியிருக்கிறார்.

)  இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்துள்ள ஹதீஸ் துறை
பெரிய இமாம்களில் ஒருவரான இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்களும் மேற்கண்ட செய்தியை மேலோட்டமாக
கூறியிருக்கிறார்கள்.

ஸஹீஹ்  இப்னு குஸைமா  ஹதீஸ் எண்  714 (சம்பந்தப் பட்ட ஹதீஸ்),  ஹதீஸ் வாசகம் முடிந்ததும் இப்னு குஸைமா எழுதுவது:

அபூபக்கர் (இப்னு குஸைமா ) கூறுவது:  “ஹதீஸ்களில் எதிலும் அதனை அசைப்பார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை. இந்த ஹதீஸை தவிர!  அசைப்பு பற்றி கூறுவது இதில் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

) காலித் பின் அப்தில்லாஹ் என்பவர் ஆஸிம் பின் குலைப்  வாயிலாக
அறிவிக்கும் இதே ஹதீஸை இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதில் விரலை அசைத்ததாக இல்லை. (பார்க்க: அஸ்ஸுனனுல் குப்ரா, ஹதீஸ் எண்: 2895 பாகம் 2, பக்கம் 131)

இந்த ஹதீசஸுக்குக் கீழ் இமாம் பைஹகீ எழுதுவது:

இந்த கருத்தில் தான் ஆஸிம் பின் குலைபிடமிருந்து ஒரு கூட்டமே இந்த ஹதீஸை அறிவித்துள்ளது. நாம் இதையே நடைமுறை படுத்துவோம். இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதையும் இப்னு ஸுபைரின் ஹதீஸில்
அறிவிக்கப்பட்டுள்ளதையும் நாம் தேர்ந்தெடுப்போம். இரண்டிலும் விரலை அசைத்ததாக இல்லை. இப்னு ஸுபைரின் ஹதீஸில் விரலை அசைக்கவில்லை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்களிருவரின் ஹதீஸ் உறுதியாக இருக்கிறது. அறிவிப்பாளர் தொடர் பலமாகவும் இருக்கிறது. மட்டுமின்றி, இந்த அறிவிப்பாளர்கள் ஆஸிம் பின் குலைபை விட தனித்தன்மை உடையவர்களாகவும் கூடுதல் சிறப்புக்குரியவர்களாகவும் உள்ளனர். அல்லாஹ்விடமே நல்லுதவி உள்ளது.

இவ்வாறு பைஹகீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிஞர்களின் கருத்துப்  படி விரலை அசைப்பது தொடர்பாக ஸாயிதா தவறுதலாக அதிகமாக்கி கூறிவிட்டார். இதை உறுதிப்படுத்த கீழ்வரும் அறிவிப்பாளர்கள் பெயர்களையும் அவர்கள் அறிவித்துள்ள வாசகத்தையும் பார்ப்போம்.

1) ஆஸிம் ஸாயிதா விரலை அசைத்தார்கள் நஸஈ 889

2)ஆஸிம் சுஃப்யான் விரலை நட்டு  வைத்தார்கள் நஸஈ 1159

3)ஆஸிம் அப்துல் வாஹித் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் அஹ்மத் 18870

4)ஆஸிம் ஷுஅபா ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் அஹ்மத் 18875

5)ஆஸிம் ஸுஹைர் பின் முஆவியா ஆட்காட்டி விரலால் சுட்டிக்
காட்டினார்கள் அஹ்மத் 18896

6) ஆஸிம் மூசா பின் அபீ ஆயிஷா ஆட்காட்டி விரலால் சுட்டிக்
காட்டினார்கள் பஸ்ஸார் 4489

7)ஆஸிம் மூசா பின் அபீ கஸீர் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் –தப்ரானி 17555

மேற்கண்ட விரல் உயர்த்துதல் பற்றிய ஹதீஸின் அறிவிப்பாளர்களில்
ஆஸிமிடமிருந்து செவியுற்ற ஏழு மாணவர்களில் ஆறுபேர் ஒருவிதமாகவும் ஸாயிதா என்ற மாணவர் மட்டும் வேறு விதமாகவும் அறிவித்திருப்பதை பார்க்கிறோம். (ஆசிமின் இந்த ஆறு மாணவர்கள் மட்டுமின்றி வேறு  மாணவர்களும் ஸாயிதாக்கு மாற்றமாகவே அறிவித்துள்ளனர் என்று அறிஞ்சர்கள் கூறுகின்றனர்.)

இதனால் இமாம் பைஹகீ உள்ளிட்ட பல அறிஞர்கள் ஸாயிதாவின் அறிவிப்பு நடைமுறைப்படுத்தத் தகுந்ததல்ல என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இதை நாம் முன்பு பார்த்தோம்.

இங்கு சிலர் ஸாயிதவின் மாறிப்போன அறிவிப்பை சரிகாண்பதற்க்காக தவறான வியாக்கியானம் கொடுக்கிறார்கள். அதற்கு சரியான விளக்கத்தை கீழ்வரும் பகுதியில் பார்ப்போம்.

கருத்து அடிப்படையில் : ஓன்று

நாம் மேலே கண்டவாறு ஆஸிம் பின் குலைபின் ஆறு மாணவர்கள் ஆட்காட்டி விரலால் சுட்டி காட்டியதாகவும் நட்டு வைத்ததாகவும் சொல்ல, ஸாயிதா என்ற மாணவர் மட்டும் விரலை அசைத்ததாக இன்னொரு விதமாக முரணாகச் சொல்கிறார். இது ஷாத்
என்ற பலவீன நிலையை அடைகிறது. இந்த அடிப்படையில் இந்த அறிவிப்பு செயல்படுத்தத் தகுந்ததல்ல.

ஆனால் மறுத்து வியாக்கியானம் தருகிறோம் என்ற பெயரில் சிலர் வைக்கும் வாதம்;
விரலை அசைத்து கொண்டிருப்பது சுட்டி காட்டுவதற்கு முரணல்ல, ஆகவே அசைப்பதாக வரும் அறிவிப்பை சுட்டிக்காட்டியதாக வரும் செய்திக்கு கூடுதல் விளக்கமாக எடுத்து கொள்ள வேண்டும்.

ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுவது அதை அசைத்து கொண்டிருப்பதற்கு முரணானது. அசைத்து கொண்டிருப்பது சுட்டிக்காட்டுவதாக ஆகாது.

அதனால் தான் அரபு மொழியிலும் ஹதீஸ்களிலும் சிறந்த இமாம் பைஹகீ அவர்கள் அசைத்தல் ஹதீஸை பதிவு செய்துவிட்டு கீழ்வருமாறு எழுதுகிறார்கள்:
இங்கு அசைப்பது என்று சொல்லப்படுவதன் மூலம் நாடப்படுவது
சுட்டிக்காட்டுவதாக இருப்பது தான் சாத்தியம். (அதாவது
சுட்டிக்காட்டுவதற்காக உயர்த்தும் போது ஏற்படும் அசைவு, அதை தொடர்ந்து எதார்த்தமாக ஒன்றிரெண்டு தடவை தானாக அசைவது) தொடர்ச்சியாக அசைத்து கொண்டிருப்பது என்று நாடப்படுவது சாத்தியமல்ல. இப்படி கருத்துக் கொள்ளும் போது இப்னுஸ்ஸூபைரின் அறிவிப்புடன் ஒத்துவரக்கூடியதாக ஆகும்.”
(
பார்க்க : அஸ்ஸுனைனுல் குப்ரா (பைஹகீ) ஹதீஸ் எண் : 2899, பாகம் எண்: 2, பக்கம் :132)

இது போல கடந்த நூற்றாண்டின் சிறந்த ஹதீஸ் துறை அறிஞரான அல்லாமா அஹ்மத் பின் முஹம்மத் அஸ்ஸித்தீக் அல்குமாரீ இக்கருத்தையே பதிவு செய்துள்ளார்கள். இமாம் பைஹகீயின் மேற்கண்ட கருத்தை எழுதிவிட்டு அவர்கள் கூறுவது இதற்கு வேறு அர்த்தம் இல்லை. இந்த (அசைத்தல் பற்றிய) வார்த்தை
அறிவிப்பாளர்கள் மாற்றியதால் ஏற்பட்டதே தவிர வேறில்லை.”
(
பார்க்க: அல்ஹிதாயா ஃபீதக்ரீஜி அஹாதீஸில் பிதாயா பாகம் : 3, பக்கம் 137, பதிப்பு : ஆலமுல் குத்துப்)

இக்கருத்தை நிகழ்கால ஹதீஸ் துறை அறிஞர் அல்லாமா ஷுஐப் அல்அர்னஊத்’ அவர்களும் கூறியிருப்பதை முன்பு குறிப்பிட்டுள்ளோம்.

இதில் முக்கியமான இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது, வாயில் பின் ஹூஜ்ர்(ரலி) என்ற சஹாபியின் ஹதீஸை பலரும் ஒரே மாதிரியாக அறிவிக்க ஸாயிதா என்பவர் மட்டும் அசைப்பதை சேர்த்து கூட்டி சொல்லியிருக்கும் ஒரு ஹதீஸை பற்றித்தான்.

ஸாயிதாவைத் தவிர்த்த மற்ற அறிவிப்பாளர்களின் வார்த்தையே சரி என்பதை நாம் இந்த ஹதீஸோடு தொடர்பில்லாத வேறு சஹாபாக்கள் கூறியுள்ள வேறு அறிவிப்பாளர்கள் வழியாக கிடைத்துள்ள ஹதீஸ்களைப் பார்த்து முடிவு செய்துவிடலாம்.

சுட்டிக்காட்டியதாக மட்டும் வரும் ஹதீஸ்கள்:

) இப்னு உமர்(ரலி), நூல் : முஸ்லிம் 913 மற்றும் முஅத்தா. அஹ்மத், நஸாஈ

) நுமைர் அல்குஸாஈ(ரலி) அவர்கள் : இப்னு  குஸைமா 716

இதுபோல் சுட்டிக்காட்டியதாக, உயர்த்தியதாக, நீட்டி வைத்ததாக பல
ஸஹாபாகளால் அறிவிக்கப்பட்டுள்ள பல ஹதீஸ் நூல்களில் தஷஹ்ஹுத் பற்றிய பாடத்தில் பார்க்கலாம்.

கருத்து அடிப்படையில் : இரண்டு

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் (தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில்) துஆ செய்யும் போது தன் விரலால் சுட்டிகாட்டுவர்கள். அதை அசைக்கமாட்டர்கள். (நூல் : அபூதாவூத் 991 நஸாஈ)

ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் தெளிவாகவே விரலை அசைக்கவில்லை என்று கூறுகிறது.

இதை மறுக்க முனையும் சிலர், உடன்பாடான செய்திக்கு முன்னுரிமை கொடுத்து எதிர்மறைச் செய்தியை விட வேண்டும். என்ற நியதிப்படி செயல்பட வேண்டும் என்கின்றனர்.

அதாவது அசைத்ததாக வருவதை எடுத்துக் கொண்டு அசைக்கவில்லை என்பதை விட வேண்டும் என்கின்றனர். இவர்கள் முக்கியமான ஒன்றை கவனிக்க மறுக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரலி) அவர்கள் தனது இந்த ஹதீஸில் பின்வருமாறு கூட சொல்லியிருக்கலாம்.

அத்தஹ்ஹிய்யாத் இருப்பில் நபி(ஸல்) அவர்கள் தலையை அசைக்கவில்லை, கண்ணை கசக்கவில்லை, உதட்டை பிதுக்கவில்லை, இடது கை பெருவிரலை உயர்த்தவில்லை.
இப்படி நபி செய்யாத பல செயல்களை இல்லை இல்லை என்று நூற்றுக்கணக்கில் சொல்லியிருக்கலாம்.

அப்படி எதையும் சொல்லாமல் இதை மட்டும் ( ஆட்காட்டி விரல் அசைப்பை மட்டும்) இல்லை என்று சொல்கிறார்கள் என்றால் தகுந்த காரணம் இருக்கிறது என்பதைப் புரிய முடியவில்லையா?

காரணம்:

ஸஹாபாக்கள் காலத்தின் பிற்பகுதியில் சிலர் விரலை அசைக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதை கண்டதனால் தான் அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் அசைக்கவில்லை என்கிற செய்தியை- அவ்வாறு தான் பார்த்ததின் அடிப்படையில்- சொல்லி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கத்துக்கு மறுப்பை பதிவு செய்கிறார்கள்.

இந்த கருத்தை வலுப்படுத்த நடைமுறையிலுள்ள ஒரு வழக்கத்தை ஆதாரமாக கொள்ளலாம். அரபு நாடுகளுக்குச் சென்றவர்கள் பார்த்திருப்பார்கள். ஜமாஅத்தாக தொழுது கொண்டிருக்கும் போது இமாம் ஓதுகிற வசனத்தில் தவ்ஹீதை (ஏகத்துவத்தை) குறிக்கிற வசனங்கள் வரும்போது தக்பீர் கட்டி நிற்கும் நிலையிலேயே ஆட்காட்டி விரலை உயர்த்தி அதனை சில தடவை அசைப்பார்கள் சிலர்.

ஓரிறை கொள்கையை கூறுகிற வசனங்களை கேட்கும் போதும் ஓதும் போதும் ஆட்காட்டி விரலை உயர்த்த வேண்டும் என்றோ அசைக்க வேண்டும் என்றோ நபிவழியில் இல்லை.

ஆனால் மேற்கண்ட நடைமுறை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே இது நபியின் காலத்துக்கு பின்பு தோன்றிய புதிய பழக்கம் என்பதை புரிகிறோம். அது போலத்தான் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலை அசைப்பதும் புதிய பழக்கம். அது தோன்றுகிற காலத்திலேயே கண்ட ஸஹாபி அப்துல்லாஹ் பின் ஸுபைர். இப்படி நபி செய்யவில்லை என்ற தகவலை சேர்த்து சொல்கிறார்கள்.

ஆகவே இந்த ஹதீஸின் செய்தியை ஏற்றுக் கொள்வது கடமை! இதனால் தான் இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் அசைத்தல் செய்தி இடம்பெறும் ஹதீஸை பதிவு செய்துவிட்டு கீழ்வருமாறு எழுதுகிறார்கள்;

அசைத்தல் என்பதன் மூலம் நாடப்படுவது சுட்டிக்காடுதலாக இருப்பது தான் சாத்தியம். அதை தொடர்ந்து அசைத்து கொண்டிருப்பது என்று நாடப்படுவது சாத்தியமல்ல. இவ்வாறு கருத்து கொள்ளும் போது இப்னுஸ் ஸுபைரின் அறிவிப்புக்கு (அபூதாவூத் 991 க்கு)  ஓன்று பட்டதாக இந்த நபிமொழி ஆகிவிடும் அல்லாஹ் நன்கறிந்தவன்!”
அஸ்ஸுனைனுல் குப்ரா 2899 / பாகம் : 2 பக்கம் :132

மட்டுமின்றி, இப்னுஸ் ஸுபைர்(ரலி) அவர்களின் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள். ஆஸிம் பின் குலைபை விட தனித்தன்மை உடையவர்களாகவும் கூடுதல் சிறப்புக்குரியவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அஸ்ஸுனைனுல் குப்ரா ஹதீஸ் எண் 2895 ன் கீழ் அவர்கள் எழுதி உள்ள இச்செய்தியை மேலே நாம் எடுத்தெழுதியுள்ளோம்.

கருத்து அடிப்படையில்: மூன்று!

அத்தஹிய்யாத் இருப்பில் வலது கை ஆட்காட்டி விரலை உயர்த்துவது பரவலாக நபிதோழர்களிடத்தில், தவ்ஹீத் (ஓரிறைக்) கொள்கையை சுட்டிக்காட்டுவதாகவே கருதப்பட்டு வந்தது. ஓரிறைக் கொள்கையை உணர்த்தும் விதத்தில் சுட்டிகாட்டுவதாயிருக்கும் போது நீட்டி வைத்திருப்பது தான் சரியான முறையும் ஒழுங்கும் ஆகும்.

இக்கருத்தை கூறும் ஹதீஸ்கள் சிலவற்றை பார்ப்போம்:

பிரபல தாயிஈ இப்னு ஸீரீன்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் அத்தஹிய்யாத் இருப்பில் இருவிரலை (அதாவது இரு கைகளின் ஆட்காட்டி விரலையும்) நீட்டி துஆ செய்து கொண்டிருப்பதை சஹாபாக்கள் பார்த்தால் அவற்றில் ஒன்றை அடித்து விட்டு அவன் ஒரே இறைவன் தான் என்று கூறுவார்கள்.” நூல் : இப்னு அபீஷையா 8522

குஃபாஃப் பின் ஈமாஉ(ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் தஷஹ்ஹுத் ஓதுவதற்கு அமர்ந்தால் தனது விரலால் சுட்டிகாட்டுவார்கள். இதை கண்ட இணைவைப்பாளர்கள் நமக்கு இவர் சூனியம் செய்கிறார்
என்பார்கள்.  ஆனால் நபி(ஸல்) அவர்கள் தவ்ஹீதைத்தான் நாடுவார்கள்.” நூல் : அஸ்ஸுனைனுல் குப்ரா, பைஹகீ 2904 பாகம் : 2  பக்கம்:132

(இந்த ஹதீஸை குஃபாஃப்(ரலி) அவர்களிடம் செவியுற்ற தாபிஈ இன்னார் என்ற பெயருடன் குறிப்பிடப்படாமல் மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு குறை.  ஆயினும் ஓரிறை கொள்கையை உணர்த்தும் விதத்தில் ஆட்காட்டி விரலை உயர்த்துவது அமைந்துள்ளது என்பது ஹதீஸ்களில் காணப்படும் தகவல் என்பதற்கு ஆதாரமாக இச்செய்தியை எடுத்துக்கொள்ளலாம்.)

பிரபல தாபிஈ இப்ராஹீம் கூறுகிறார்: தொழுகையில் ஒருவர் தன் ஒரு விரலால் சுட்டிக் காட்டினால் அது அழகிய செயல் அது தான் தவ்ஹீத். இரு விரல்களால் சுட்டிக் காட்டக்கூடாது. அது வெறுக்கத்தக்கது.”
நூல் : முஸன்னஃப் இப்னு அபீஷையா 8523.

கருத்து அடிப்படையில்: நான்கு

அத்தஹிய்யாத்தில் நபி(ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தியை அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரலி) அவர்கள். அவர்களின் இளைய சகோதரரும் பிரபல ஹதீஸ் அறிவிப்பாளரும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின்
மாணவருமான உர்வா பின் ஸுபைர் பற்றிய செய்தி:

ஹிஷாம் பின் உர்வா, “தன்  தந்தை உர்வாபின் ஸுபைர் தொழுகையில் தனது விரலால் சுட்டிக் காட்டுவார்கள். அதை அசைக்க மாட்டார்கள் என்று அறிவிக்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் விரலை அசைக்கமாட்டர்கள் என்று அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அறிவிக்கிறார்கள். இது ஒரு செய்தி. இவரின் இளைய சகோதரர் உர்வா பின் ஸுபைர் விரலை அசைப்பதில்லை. இது இன்னொரு செய்தி. இந்த இரண்டாவது செய்தி நபி விரலை அசைக்க மாட்டார்கள் என்ற முந்தய செய்தியை வலுப்படுத்துகிறது. தம்பி உர்வா அண்ணன் அப்துல்லாஹ்வின் மாணவர் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இந்த விசயம் தெளிவாகப் புரியும். அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களின் ஹதீஸை பலவீனப் படுத்த முனைவதும் தவறு எனபதும் புரியும்.

இது வரை எழுதியிருப்பதை உறுதிப்படுத்தும் மற்றொரு ஹதீஸ்; ஒரு மனிதர் தொழுகையில் (இருப்பில்) பொடிக்கல்லை புரட்டிக் கொண்டிருந்தார். அவர் தொழுது முடித்ததும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்மனிதரை அழைத்து நீ இப்படி செய்யாதே இது ஷைத்தானின் செயல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போல் செய் என்றார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதர் எப்படி செய்வார்கள் என்று கேட்டார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், தனது வலது தொடை மீது தனது வலது கையை வைத்து பெறு விரலுக்கு அடுத்த விரலால் கிப்லா திசையில் சுட்டிக்காட்டினார்கள். அதன் பக்கம் தன பார்வையை செலுத்தினார்கள். பிறகு இவ்வாறுதான் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். (நூல்; நஸாஈ 1160, இப்னு ஹிப்பான் 1947)

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, நபி (ஸல்) எப்படி செய்வார்கள் என்று கேட்ட மனிதருக்கு விளக்கமளித்த இப்னு உமர் (ரலி) அசைத்துக் காட்டவில்லை அசைத்ததாக சொல்லவும் இல்லை. அது நடைமுறையாக இருந்திருந்தால் இந்த இடத்தில் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.

அல்லாஹ் நன்கறிந்தவன்!

  -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil          

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE