தேவனுக்கு குமாரனா?

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Jan 22, 2015 Viewers: 2021


தேவனுக்கு குமாரனா?

டிசம்பர் மாதம் 25ம் தேதியை இயேசு என்ற ஈஸா  (அலை) அவர்களின் பிறந்த நாள் எனக் கூறி கிருஸ்துமஸ் தினம் கொண்டாடுகிறார்கள். கிருஸ்தவ சகோதரர்கள். அந்த நாள் தான் உண்மையிலேயே அவர்கள் பிறந்த நாள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது முறையானதல்ல.

ஆனால் நாம் அந்த சர்ச்சையை விட்டுவிட்டு கிருஸ்தவ சகோதரர்கள் ஈசா நபி பற்றி கொண்டிருக்கும் அடிப்படை நம்பிக்கை சரிதானா என்று பார்ப்பதே முக்கியமனது.

ஈசா(அலை) அவர்களை தேவனின் குமாரன் எங்கின்றனர். அடிப்படையில் இந்த நம்பிக்கை இறைவன் இறக்கி வைத்த எல்லா வேதங்களுக்கும் எதிரானது, ஈசா (அலை) உட்பட எல்லாத் தூதர்களும் செய்த பிரச்சரத்துக்கு மாற்றமானது, பகுத்தறிவுக்கு ஒவ்வாதது.

நாம் சாதாரணமாக சிந்தித்து பார்த்தாலே இந்த நம்பிக்கை மிகத் தவறானது என்பதைப் புரியலாம்!

பிள்ளைப் பேறு உண்டாகுதல் என்பது எப்படி? மனிதனுக்கும் மற்ற படைப்புகளுக்கும் இச்சை என்று ஒன்று உள்ளது. அதைத் தணித்துக் கொள்வதால் பிள்ளைப் பேறு கிடைக்கிறது.

இவ்வாறான இச்சை என்று எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்டா என்றால் எல்லோருமே இல்லை என்று தான் சொல்கிறார்கள். அப்படியானால் அதனால் ஏற்படும் பிள்ளையும் தேவனுக்கு இல்லை என்பதே சரி!

அது போல் வயோதிக காலத்தில் உதவி செய்வதற்கு மனிதனுக்குத் தான் வாரிசு தேவைப்படுகிற்து. இவ்வாறு வயோதிகமும் பலவீனமும் அடையும் நிலை எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்டா என்றால் எல்லோரும் கிருத்தவர்கள் உட்பட பதிலளிப்பது இல்லை என்று தான். அப்படியானால் அவனுக்கு வாரிசு இல்லை என்பது தான் உண்மை!

தேவனுக்கு குமாரன் இருப்பதாக கூறுவது அவன் மீது கூறும் பெரும் அவதூறும் மோசமான வழிகேடும் ஆகும். இதனை சாதரண அறிவு கொண்டவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் திருக்குர்ஆனில் பல விதங்களில் தேவன் விளக்குகிறன். உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட எந்த மனிதரும் அதை மறுக்க முடியாது!

மனைவி இல்லாதிருக்க

இறைவன் தனது இறுதி வேதத்தில் கூறுகிறான்:

அவர்கள் ஜின்களை இறைவனுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள். (அந்த ஜின்களான) அவர்களையும் அவனே படைத்தான். இருந்தும் அறிவில்லாத காரணத்தல் இணைவைப்போர் அவனுக்கு புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள், அவனோ இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பதிலிருந்து தூயவனானகவும், உயர்ந்தவனாகவும் இருக்கின்றன்.

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க எவ்வாறு அவனுக்குப் பிள்ளை இருக்க முடியும்? அவன எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 6:100,101

இங்கு இறைவனுக்கு மகன் இல்லை என்பதை தர்க்க ரீதியாக அந்த இறைவனே விளக்குகிறான். மனைவி என்ற உறவின் மூலமாக ஏற்படுவது தான் பிள்ளை என்ற உறவு, அவனுக்கு மனைவி இல்லை என்று நீங்களே ஒப்புக் கொள்ளும் போது பிள்ளை இல்லை என்றும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்று இந்த தவறான நம்பிக்கை கொண்டவர்களுக்கு விளக்கமளிக்கிறான்.

இப்போது ஒருவர் தன் தவறான நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அவனுக்கு மனைவி இல்லை தான் ஆனால் குமாரன் மட்டும் உண்டு என்று கூறலாம். அப்படியானால்,ஒருவர் தேவனுக்கு அப்பன் இல்லைதான், ஆனால் அம்மா மட்டும் இருக்கிறாள் என்று சொல்லலாம்.

இன்னொருவர் அவனுக்கு தாய், தந்தை இல்லை தான், ஆனால் சகோதரன் மாத்திரம் இருக்கின்றான் என்று கூறலாம். இன்னொருவர் தேவனுக்கு மாமன் இல்லை தான். ஆனால் மச்சான் மட்டும் இருக்கிறான் என்று வாதிடலாம். இந்த உறவுகளொல்லாம் இருப்பதாகச் சொன்னால், இது மனிதராக கற்பனை செய்வது, ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பீர்கள்.

இதே பதில் தான் உங்களுக்கும்! தேவனுக்கு குமாரர் இருப்பதாக கூறுவதும் பொரும்பாவமான கற்பனை தான், இறைவழியில் மக்களை வழி நடத்திய தீர்க்கதரிசிகளெல்லாம் உங்களின் இந்த நம்பிக்கைக்கு எதிரானவர்கள், ஏன் இறைத் தூதர் இயேசு அவர்களும் இந்த நம்பிக்கைக்கு எதிரானவர் தான். அவர்களுக்குப் பின்னால் வந்த மனிதர்கள் உருவக்கிய கற்பனை தான் இந்த நம்பிக்கை என்பதை உணர வேண்டும்.

அடுத்து, இயேசுவை தேவ குமாரன் என்று வாதிப்போருக்கு அவர்களின் கூற்று தவறு என்பதை தெளிவான உதாரணத்தைக் கூறி அறிவுப்பூர்வமாக மறுப்பளிக்கிறான். தேவன் தன் இறுதி வேதத்தில், கவனியுங்கள்!

நிச்சயமாக இறைவனிடத்தில் ஈசாவின் உதாரணம் ஆதமின் உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின் ஆகுக எனக் கூறினான். அவர் ஆகிவிட்டார். அல்குர்ஆன் 3:59

இந்த வசனத்தில் இறைத்தூதர் ஈஸா அவர்கள் தகப்பனின்றி தாய் மூலமாக மட்டும் படைக்கப்பட்டதால் அவர்கள் அல்லாஹ்வின் மகன்தான் என்று கற்பனை செய்வோருக்கு சிறுபிள்ளையும் விளங்கும் விதத்தில் அழகான உதாரணத்தின் மூலம் விளக்கமளிக்கப்படுகிறது.

தகப்பன் மட்டுமின்றி படைக்கப் பட்டதாலேயே ஈசா நபி தேவனின் குமாரர் ஆகிவிடுவார் என்றால் தாய் தகப்பன் இருவருமின்றி படைக்கப்பட்ட ஆதம் தேவனின் குமாரர் என்று சொல்ல அதிக தகுதிபடைத் தவராகி விடுவார்.

நீங்களே சொல்லிவிடுவீர்கள், தாயும் தகப்பனும் இல்லாவிட்டாலும் அவரும் தேவனால் படைக்கப்பட்டவர் தானே என்று, இது தான் இயேசு விஷயத்திலும் சொல்லப்பட வேண்டியது.

தகப்பன் இல்லாவிட்டாலும் ஒரு அற்புதமாக இருக்க வேண்டுமெனபதற்காக இறைவன் தான் அவரை அவ்வாறு படைத்தான், படைக்கப்பட்டவரெல்லாம் தேவனின் அடிமைகள் தானே தவிர எவரும் அவனுக்கு குமாரர் அல்ல என்பதை புரிய வேண்டும்.

இயேசு இறைவனின் மகன் என்று சொல்வது கூடாது என்பதற்கு இன்னொரு அறிவார்ந்த வாதத்தை முன் வைக்கிறான் இறைவன்.

மர்யமின் குமாரர் மஸீஹ் தூதரே தவிர வேறில்லை, அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டனர்.அவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவு படுத்துகிறோம் என்பதை கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! அல்குர்ஆன் 5:75

இதில் இயேசுவும் அவர் தாயாரும் எல்லா மனிதர்களுக்குமுள்ள தேவைகள் உள்ளவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை கூறி, இயேசு தேவனின் குமாரராகவோ  கடவுளின் தன்மை கொண்டவராகவோ இருக்கவில்லை அவ்வாறு யாரும் இருக்க முடியாது என்பதை விவரிக்கிறான்.

இவ்வாறெல்லாம் அறிவார்ந்த ஆதாரத்துடன் தேவன் தன் இறுதி வேதத்தில் இயேசு தனது குமாரர் அல்ல, தனது அடிமையும், தூதரும் தான் என்று விளக்கமளிகிறான்.

இருப்பினும் கிருத்துவ சகோதரர்கள் அவர் தகப்பனின்றி பிறந்தாரே என்ற காரணத்தை முன்வைக்கலாம். ஆம் அவர் தகப்பனின்றி பிறந்தது உண்மை தான். அவரை எல்லாம் வல்ல இறைவன் அவ்வாறு படைத்தான்! அதற்கான காரணத்தையும் அவனே கூறுகிறான்.

மர்யமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம். அல்குர்ஆன் 23:50.

ஆணின் தீண்டுதல் இல்லாமல் ஒரு பெண் மூலம் தனது ஆகட்டும் என்ற உத்தரவு மூலம் ஒரு மனிதரை படைக்க இயலும் என்பதற்கு ஓர் ஆதாரமாகவும் அற்புதமாகவும் இருப்பதற்காக அவ்வாறு படைத்துள்ளான்.

ஒரு வேளை தாய், தகப்பன் இருவரும் இல்லாமல் அவரை அல்லாஹ் படைத்திருந்தால் கூட அவர் அல்லாஹ்வின் மகனாக ஆக முடியாது, ஏனென்றால் அவனால் படைக்கப்பட்ட அனைவரும், அனைத்தும் அவனுக்கு அடிமைகள். அவனுக்கு உரியவர்கள்.

“’அல்லாஹ் ஒரு குமாரனை ஏற்படுத்திக்கொண்டான் என்று கூறுகின்றனர். அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத்தூய்மையானவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவையாவும் அவனுக்கே அடிபணிகின்றன. அல்குர்ஆன் 2:116

பைபிளில் இயேசுவைப் பற்றி தேவ குமாரன் என்று சொல்லப்பட்டிருபதால் அப்படிதான் நம்ப வேண்டும் என்று வாதிடலாம்; ஆனால் நல்லவர்களாக நடந்து கொள்பவர்களெல்லாம் தேவனுக்கு புத்திரர்கள் என்று பைபிளில் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.

சில நன்னடத்தைகளை போதித்த ஈசா நபி, இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராய்யிருப்பீர்கள்…” ( மத்தேயு அதிகாரம் 5, வசனம்  45) என்று மக்களைப் பார்த்து கூறியதாக உள்ளது. அப்படியானால் நல்லவர்கள் எல்லாம் தேவனுக்கு மகன்தான்.

அதுபோல் இன்னொரு வசனம்:

ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்க கடவீர்கள் (மத்தேயு அதிகாரம்-5, வசனம் 48)

இந்த வசனத்தின்படி பரலோகத்தில் இருக்கிற தேவன் உங்கள் எல்லோருக்கும் பிதா தான்!

இன்னொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது:

அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். ( யோவான் அதிகாரம்-1, வசனம் 12)

நபி ஈசாவை ஏற்றுக் கொண்டவர்களாயிருக்கும் அத்தனை பேரும் தேவனின் குமாரர்களாக இருக்க அவர்களே அதிகாரம் கொடுத்து விட்டார்கள்.

ஆக இதுபோன்று பைபிளில் சொல்லப்படுவதெல்லாம் கடவுளுக்கு விருப்பமான வழியில் நடப்பவர்கள் அவனது பிள்ளைகள் என்று சொல்லப்படத்தக்கவர்கள், அந்த அளவிற்கு அவனுக்கு விருப்பமானவர்கள் என்ற கருத்தை தருகின்றன.

அவ்வாறிருக்கையில் பைபிளின் வார்த்தைப்படி,தேவனின் கோடிக்கணக்கான குமாரர்களில் ஒருவராயிருக்கும் இயேசுவை மட்டும் கர்த்தர் என்று கூறி மிகைபடுத்துவதும், தெய்வத்தன்மை உள்ளவராக சித்தரிப்பதும் அவரை வணங்குவதும் பெரும்பாவமாகும்.

இது பைபிள் ஏற்காத கொள்கையும், ஈசா நபி எதிர்க்கும் கருத்துமாகும். உண்மையைச் சொல்லப்போனால் தேவனுக்கு மகன் இருப்பதாக சொல்வது முற்காலத்தில் வழிகெட்டுப் போன விசுவாசமற்ற கூட்டத்தின் கொள்கையாகும்.

திருக்குர்ஆன் கூறுகிறது:

யூதர்கள் உஜைர் அல்லாஹ்வின் மகன் என்று கூறுகிறார்கள். கிருத்தவர்கள் மஸீஹ்  அல்லாஹ்வின் மகன் என்று கூறுகிறார்கள். இது அவர்கள் தங்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்,

(இவர்களுக்கு) முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள். அல்குர்ஆன் 9:30.

ஈசா நபியையோ அல்லது வேறு எவரையுமோ இறைவனின் மகன் என்று கூறுவது பெரும்பாவமாகும். தேவன் தன் இறுதி வேதத்தில் கூறுகிறான்:

அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்). அவர்களுக்கோ அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும். அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 18:4,5.

இன்னும், அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான் என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கீறீர்கள். இவர்களின் இந்த கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும் அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச் செய்வதினால் ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால் வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 19:88,93

ஆகவே இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் அவனது அருளைப் பெறவும் விரும்புபவர்கள் அவனுக்கு குமாரன் இருப்பதாக கூறும் வழிகேட்டிலிருந்து மனம் திருந்தி, தகப்பனும் மகனுமில்லாத எல்லாம் வல்ல ஒரே இறைவனை விசுவாசம் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வழிப்படும் சத்திய மார்க்கம் இஸ்லாத்திற்கு வர வேண்டும்.

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil          

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE