பரக்கத்தை இழந்த ரஹ்மத்...!

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Jan 09, 2014 Viewers: 2830


பரக்கத்தை இழந்த ரஹ்மத்...!

பரக்கத்தை இழந்த ரஹ்மத்...!

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் தமிழில் வெளிவராதது தமிழ் மக்களுக்கு - குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது.

அல்லாஹுவின் கிருபையால் முஸ்தஃபா-தமீம் ஆகிய இரு சகோதரர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளை மூலம், ஹதீஸ் நூல்களில் முதன்மையான புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்கள் தமிழில் வெளிவந்தன.

இன்று ஒரு பாமர முஸ்லிம் கூட மார்க்கத்தின் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டு இது புகாரியில் இருக்கிறது என்று கூறுகிற நிலை ஏற்ப்பட்டிருக்கிறது. இது இந்நிறுவனத்தால் கிடைத்த மிகப் பெரிய பலன். இதற்காக தமிழ் முஸ்லிம் சமூகம் இந்நிறுவனத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

ஆனாலும் இந்நிறுவனத்தின் இப்போதைய நிலை நம்மை வருத்தமடையச் செய்கிறது. ஏனெனில் இவர்களின் இப்பணியில் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களின் தமிழாக்கம் வெளிவந்த காலகட்டத்துடன் ஒப்பிட்டால் சுனனுத்திர்மிதியின்  முழுமையான தமிழாக்கமும், முக்தஸர் தஃப்சீர் இப்னு கஸீரின் முழுமையான தமிழாக்கமும் வெளிவந்திருக்க வேண்டும், வெளிவரவில்லை!. என்ன ஆயிற்று?

இளையவர் தமீம் அவர்கள், ரஹ்மத் பப்ளிகேஷன் என்ற பெயரில் இதே நற்பணிக்காக தனி நிறுவனம் ஆரம்பித்தார்கள். மார்க்கக் கல்வி ஆர்வலர்களிடத்தில் இனி நிறைய ஹதீஸ் நூல்களை தமிழில் படிக்கலாம் என்ற ஆவல் ஏற்ப்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல் சுனன் நசயீ தமிழாக்கத்தின் முதல் பாகமும் முஸ்னது அஹ்மத் தமிழாக்கத்தின் முதல் பாகமும் இந்த நிறுவனத்தின் மூலம் வெளிவந்தன.

ஆனால் அடுத்த பாகங்களைக் காணோம். உண்மை என்னவெனில் இந்நிறுவனம் ஆரம்பித்து இத்தனை வருடத்தில் சுனனுன் நசயீயின் தமிழாக்கம் முழுமையாக வெளிவந்திருக்க வேண்டும். முஸ்னது அஹ்மதின் ஐந்து பாகங்களாவது வெளிவந்திருக்க வேண்டும். வெளிவரவில்லை!. என்ன பிரச்சனை?

இச்சிறந்த பணியில் தொய்வு ஏற்ப்பட்டதற்க்கு முக்கிய காரணம் ஒரு பணி நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு பணியை இடையில் ஆரம்பித்து கலந்து செய்வது. உதாரணத்திற்கு, திர்மிதி மொழிபெயர்ப்புப் பணி நடந்து கொண்டிருக்கும் போது முன்னர் வெளிவந்த புகாரியை சரிபார்த்து அடிக்குறிப்பு எழுதும் பணியை நுளைத்ததைக் குறிப்பிடலாம்.  (இது ரஹ்மத் பதிப்பகத்தில் நடந்தது) அதுபோல் நசயீ பணி நடந்து கொண்டிருக்கும் போது  அஹ்மத் பணியை எடுத்துக்கொண்டதையும் குறிப்பிடலாம். (இது  ரஹ்மத் பப்ளிகேஷனில் நடந்தது).

மொழிபெயர்ப்பு மேலாய்வாளர் என்ற பொறுப்பில் சம அந்தஸ்தில் இருவரை நியமிப்பது, மற்ற நிறுவனத்திற்கு வெறுப்பேற்றும் விதத்தில் அங்கிருப்பவரை இங்கே இழுப்பது போன்ற நிர்வாக குளறுபடியின் அடையாளங்கள்.

அதுபோல் நிறுவனத்தின் மூலம் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நூலை விரைந்து வெளியிடுவதற்கான  முயற்சியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு நிறுவனத்திற்கு வெளியே வேறு நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்ச்சியில் இறங்குவது. அதனால் இரண்டுமே சரியான நேரத்தில் வெளிவராமல் தாமதமாகிக் கொண்டிருப்பது நிதர்சனம்.

இக்குறைகள் போல் வேறு குறைகளும் இருக்கலாம்.

ஆகவே, குறைகளைச் சரி செய்யுங்கள், முறையாகத் திட்டமிடுங்கள். ஒவ்வொரு நூலும் (அல்லது பாகமும்) வெளிவரவேண்டிய கால அளவை முன்கூட்டியே வரையருங்கள்! அல்லாஹு நர்ப்பயனை பரக்கத்தாக வழங்குவான் - இன்ஷா அல்லாஹ்!

நாம் எழுதியிருப்பது குறை கூறுவதற்க்கல்ல. நற்ப்பணி நிறைவாக நடைபெற வேண்டுமென்பதற்காகவே! அல்லாஹு போதுமானவன்.

 

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE