அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்?
அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்?

அறபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்...?

- மௌலவி யூனுஸ் தப்ரீஸ் 

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று பிடிக்கப் படும் அறபா நோன்பை சவூதி தீர்மானிக்கும் பிறை யின் அடிப்படையில் பிடிப்பதா அல்லது அவரவர்களின் நாட்டின் பிறை கணக்கு படி பிடிப்பதா என்பது மக்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய தொடர் கதையாகவே உள்ளது.

பொதுவாக பிறை விசயத்தில் உள்நாட்டு பிறை, வெளிநாட்டு பிறை என்று இரண்டு கருத்துகளும் ஹதீஸின் அடிப்படையில் பேசப் படுவதால், யாருடைய கருத்து ஆய்வின் அடிப்படையில் மிக சரியாக இருக்கிறதோ அவருக்கு இரண்டு கூலிகளும், யாருடைய கருத்து ஆய்வின் அடிப்படையில் பிழைத்து விடுகிறதோ அவருக்கு ஒரு கூலியும் என்று சர்ச்சைகளுக்கு இஸ்லாம் முற்றுப் புள்ளி வைக்கிறது....

Read More →
அரஃபா பேருரை!
அரஃபா பேருரை!

அறபா பேருரை

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

"உபதேசம் செய்யுங்கள் அது முஃமின்களுக்கு பயன் தரும்" என்ற அல்லாஹ்வின் உபதேசத்தை முன் நிறுத்தி இந்த கட்டுரையை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்கிறேன். அறபா பேருரை என்பது உலகம் அழிகின்ற வரை அனைத்து மக்களுக்கும் ஓர் உபதேசமாகவும், வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த அழகிய வழி காட்டியாகவும் அமைந்துள்ளது. இதை வாசிக்க கூடிய அனைவரும் இதில் சொல்லக் கூடிய நபியவர்களின் உபதேசத்தை உள்ளத்தில் பதித்து, வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த பழகிக் கொள்ளுங்கள்....

Read More →
உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்!
உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்!

உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்

××××××××××××××××××××

- S.H.M இஸ்மாயில் ஸலபி


துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(ரழி) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடு களையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது.


ஆனால், உஸ்மான்(ரழி) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும்...

Read More →
ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்!
ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்!

ஹஜ் உம்றா தொடர்பான சந்தேகங்கள் 

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)


பயண அறிவிப்பு

கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா?


பதில்:-

“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)


மேற்படி வசனத்தில் ஹஜ்ஜையும், உம்றாவையும் அல்லாஹ்வுக்காகச் செய்யுமாறு அல்லாஹ் ஏவுகிறான். ஹஜ்-உம்றாச் செய்வோர் பேருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது எல்லோரும் செய்கின்றார்கள் என்பதற்காகவோ செய்யக் கூடாது...

Read More →
வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01
வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01

நற்குணமும் நபியும்

வழிகாட்டும் வாழ்வியல்

தொடர்:01

உங்களைப் போன்ற ஒரு ஆளுமையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்...

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில் நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது.இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது வாழ்க்கை தூய்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது. இளமைப் பருவத்திலேயே...

Read More →
ரமளானின்  கடைசி பத்து நாட்கள்
ரமளானின் கடைசி பத்து நாட்கள்

ரமளானின்  கடைசி பத்து நாட்கள்

- மௌலவி அப்துர்ரஹ்மான் மன்பஈ

         சிறப்புக்குரிய ரமளானின் இறுதிப் பத்து நாட்களை அடைந்து விட்டோம். ரமளான் மாதத்தின் எல்லா நாட்களும் சிறப்புக்குரியவை என்றாலும் அதன் பிந்திய பத்து நாட்கள் கூடுதல் சிறப்புமிக்கவை. 

Read More →
ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ]
ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ]

ஜிஹாத் ஒரு விளக்கம்-  இரண்டாம் பகுதி

- சகோ நூர் முஹம்மது

ஆயத்துஸ்ஸைஃப்


சூறத்துத் தவ்பாவின் 5 ஆவது வசனம் ஆயத்துஸ்ஸைஃப் என்று அழைக்கப் படுகின்றது. இஸ்லாமிய எதிரிகள் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இஸ்லாம் இறை நிராகரிப்பாளர்களை வாளுக்கிரையாக்கச் சொல்கிறது என்று கூறும்போது இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதத்தைப் போதிப்பவர்களும் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இறை நிராகரிப்பாளர்கள் அனைவரின் இரத்தமும் முஸ்லிம்களுக்கு ஹலால் என்ற ஒரு வழி கெட்ட கொள்கையை பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். 

Read More →
ஜிஹாத் - ஒரு விளக்கம்
ஜிஹாத் - ஒரு விளக்கம்

ஜிஹாத் - ஒரு விளக்கம்

- சகோ நூர் முஹம்மது

ஜிஹாத் என்ற வார்த்தையைக் கேட்டால் செவிப்பறையை கிழிக்கும் வெடிகுண்டுகளின் ஓசையும், தகர்ந்து விழக்கூடிய கட்டிடங்களும் அதிலிருந்து உயரும் தூளிப்படலமும்,  உடலிலிருந்து பலமாக உருவப்படும் கூர்மையான கத்தியும் அதிலிருந்து வழிந்தோடும் இரத்தமும், அடுக்கடுக்கான உயிரற்ற சடலங்களும் அங்கிருந்து எழும் ஓலக்குரலும் தான்  மனதில் கற்பனையாக விரியும் என்று கூறுமளவிற்கு நிந்திக்கப்படுகின்ற ஒரு வார்த்தையாக ஜிஹாத் மாறி இருக்கின்றது. 

Read More →