புரிய சிரமமான வசனங்கள்-3

குர்ஆன் | விளக்கம் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Mar 03, 2017 Viewers: 2162


புரிய சிரமமான வசனங்கள்-3

சிரம் சாய்த்தார்களா? இல்லையா? - அல்குர்ஆன் 2:34 விளக்கவுரை

திருகுர்ஆன் வசனம்:

நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்கு சிரம்பணியுங்கள்என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (சிரம் பணிய) மறுத்தான்; பெருமையும் கொண்டான்; மேலும் அவன் நிராகரிப்பவர்களைச் சார்ந்தவனாகிவிட்டான். " (2:34).


 இந்த வசனத்தின் கருத்து திருகுர்ஆனில் 7:11, 17:61, 18:50, 20:116 ஆகிய வசனங்களிலும் இடம் பெறுகிறது.

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களுடைய அறிவின் மேன்மையை வானவர்களுக்கு முன்னிலையில் நிரூபித்த பின் அவர்களுக்கு வானவர்கள் அனைவரும் சிரம் பணிய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்ட போது அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தனர், இப்லீஸ் மட்டும் சிரம் பணியவில்லை என்ற செய்தி இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

இங்கு சிரம் பணியுங்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள வார்தையின் அரபி மூலம், أسجدوا  உஸ்ஜுதூ (சுஜூது செய்யுங்கள்) என்றுள்ளது.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் சுஜுது செய்யக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் தடுத்துள்ளார்கள். இது சத்திய இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாடு.

ஆனாலும் மேற்கண்ட வசனங்களில் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்யும் படி அந்த அல்லாஹ்வே உத்தரவிட்டதால் அல்லாஹ்வுடைய உத்தரவுக்கு கட்டுப்படுதல் என்ற அடிப்படையில் வானவர்கள் சுஜூது செய்தார்கள்.

இங்கு படைக்கப்பட்டவருக்கு சுஜூது செய்யக்கூடாதே என்ற காரணத்தினால் வானவர்களின் சுஜூது குறித்து இரு தரப்பினரால் தவறான வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அந்த வியாக்கியானங்களில் உள்ள குறைபாடுகளையும் இதனை சரியாக புரிந்து கொள்வது எவ்வாறு என்பதையும் பார்ப்போம்.

ஒரு தரப்பின் வியாக்கியானம்:

ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர்கள் சுஜூது செய்தார்கள் என்பதன் கருத்து அவர்களெல்லாம் அவருக்கு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்பதுதான். நேரடியாக நாம் புரியும் விதத்தில் அவர்கள் சுஜூது செய்யவில்லை.

இவ்வாறு வியாக்கியானம் கூறும் இவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கீழ்வரும் வசனத்தை காட்டுகிறார்கள். அது:

வானங்களிலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் பிராணிகளும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? (22:18)

இங்கு சொல்லப்பட்டுள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கு பணிகின்றன என்ற கருத்திலேயே அவை சுஜூது செய்கின்றன என்று கூறப்படுகிறது. நாம் செய்வது போன்ற சுஜூது செய்கின்றன என்ற கருத்திலல்ல.

பணிதல் என்ற கருத்திலேயே 13:15, 16:48,49 வசனங்களிலும் சுஜூது என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இவர்கள் வியாக்கியனம் கூறுகிறார்கள்.

மேற்கண்ட வசனங்களில் சுஜூது என்பது பணிதல் என்கிற கருத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இதை வைத்து ஆதம் நபிக்கு வானவர்கள் சுஜூது செய்ததும் இந்த அர்த்தத்தில் தான் என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் நாம் புரிவது போன்று நேரடியான சுஜூது தான் இதன் கருத்து என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் தெளிவான ஆதாரம் உள்ளது.

அல்லாஹு தஆலா ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர்கள் சுஜூது  செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டது பற்றி கூறுவது:

“… நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ரூஹிலிருந்து அவருக்குள் ஊதும் போது அவருக்கு சுஜூது செய்தவர்களாக விழுங்கள் என்று கூறினான்”. (15:29)

இதேசுஜூது செய்தவர்களாக விழுங்கள் என்ற வாக்கியம் 38:72 லும் இடம் பெறுகிறது.

இதன் மூலம் வானவர்கள் சுஜூது செய்தனர் என்பது யதார்த்தமான, நாம் செய்வது போன்ற சுஜூது தான் என்பதை புரியலாம்.

இது ஹதீஸிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஆதமின் மகன் ஸஜ்தாவின் வசனத்தை ஓதி சுஜூது செய்தால் ஷைத்தான் அழுதவனாக அவனிடமிருந்து விலகிச் செல்வான். தொடர்ந்து , நாசமே! ஆதமின் மகன் சுஜூது செய்யும் படி கட்டளையிடப்பட்டான். அவன் சுஜூது செய்து விட்டான். அதனால் அவனுக்கு சொர்க்கம்! நான் சுஜூது செய்யும் படி கட்டளையிடப்பட்டேன் ஆனால் நான் மறுத்தேன் அதனால் எனக்கு நரகம்! என்று கூறுவான்."

இந்த நபிமொழி இப்னுமாஜா (1052), அஹ்மத் (9713), இப்னு குஸைமா (549) இப்னு ஹிப்பான் (2759) உள்ளிட்ட பல நூல்களிலும் இடம் பெறுகிறது.

இதன் மூலம் ஷைத்தான் ஆதம் (அலை) அவர்களுக்குச் செய்ய மறுத்த சுஜூது, நாம் செய்வது போன்ற சுஜூது தான் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

அடுத்து, வானவர்கள் ஆதம் (அலை) அவர்களுக்கு யதார்த்தமான சுஜூது செய்யவில்லை என்று கூறும் மற்றொரு தரப்பினர் கொடுக்கும் வியாக்கியானத்தை பார்ப்போம், அது:

வானவர்கள் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்தார்கள் என்பதன் கருத்து, ஆதம் (அலை) அவர்களை கிப்லாவாக மட்டும் வைத்து அல்லாஹ்வுக்கே சுஜூது செய்தார்கள்”.

இந்த வியாக்கியானம், “ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள்என்று சாதாரணமாக சொல்லப்படும் வாசனங்களை வைத்து சொல்லப்படுகிறது. (இப்படிப்பட்ட வசனங்களுக்கும் இந்த வியாக்கியானம் முரணானது தான்.) இவ்வாறு சொல் பவர்கள், அந்த சுஜூது ஆதமுக்குத்தான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் வசனங்களை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

கீழ்வரும் திருகுர்ஆன் வசனங்களை படியுங்கள்:

இப்லீஸே! நான் என்னிரு கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில்  (ஒருவனாக) ஆகிவிட்டாயா? என்று (அல்லாஹ்) கேட்டான்.

நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று (இப்லீஸ்) கூறினான். (38:75,76)

மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் தன்னிருகைகளால் படைத்த ஆதமுக்குத்தான் சுஜூது செய்யும் படி கட்டளையிட்டான் என்பதும் ஆதமை விட தான் மேலானவன் என்ற வாதத்தின் அடிப்படையில் ஆதமுக்கு சுஜூது செய்வதைத் தான் இப்லீஸ் மறுத்தான் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அதே போல் அல்லாஹ் படைத்த மனிதருக்கு, தான் சுஜூது செய்வதற்கில்லை என்று இப்லீஸ் கூறியதாக 15:33 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆக ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களிடம் கூறப்பட்டதின் கருத்து நேரடியாக ஆதமுக்கே சுஜூது செய்ய வேண்டும் என்பது தான் என்று புலனாகிறது.

இது வரை நாம் கண்ட விளக்கங்கள் மூலம் வானவர்கள் ஆதமுக்கு செய்த சுஜூது தொடர்பாக கொடுக்கப்படும் மேற்கண்ட இரண்டு வியாக்கியானங்களும் தவறானவை என்று புரிந்து கொள்கிறோம்.

சரியான விளக்கம்:

சுஜூது செய்வது (சிரம் சாய்த்து மரியாதை செய்வது) மனிதர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளக் கூடாது என்றிருந்தாலும் அல்லாஹ்வே அதனைச் செய்யும் படி கட்டளையிடும் போது அதைச் செய்யத் தான் வேண்டும். அப்போது அது அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடந்ததாகவே ஆகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் இவ்வாறு மனிதர்களுக்கு சுஜூது செய்து மரியாதை செய்வது அனுமதிக்கப்பட்டதாக இருந்துள்ளது. யூசுஃப் அலை அவர்களின் சரித்திரத்தில் அல்லாஹ் கூறுவது:

அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாக) சிரம் பணிந்து வீழ்ந்தனர். (12:100)

இங்கு சிரம் பணிந்தனர் என்று வெறுமனேசொல்லாமல் வீழந்தனர் என்று அல்லாஹ் சொல்லுகிறான். இதிலிருந்து அவர்கள் விழுந்து சுஜூது செய்துள்ளனர் என்பது புலனாகிறது.

நமது மார்க்கத்தில் இவ்வாறு செய்வது அறவே தடுக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கு சுஜூது செய்ய வேண்டுமென்று நபித்தோழர்கள் அனுமதி கேட்ட போது வெவ்வேறு சந்தர்ப்பஙகளில் நபி (ஸல்) அவர்கள் அதனை அறவே தடுத்துவிட்டார்கள்.

(பார்க்க: இப்னு மாஜா (1853), இப்னுஹிப்பான் (4162), அஹ்மது (12614)).

ஆகவே யாரும் யாருக்கும் சிரம் தாழ்த்தி மரியாதை செய்வது கூடவே கூடாது.

மேலும் மலக்குமார்கள், ஆதம்(அலை) அவர்களுக்கு இறைவனின் கட்டளைப்படி நாம் எதார்த்தமாக புரிந்துகொள்வது போலவே விழுந்து ஸஜ்தா செய்தார்கள்.

 

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE