குர்ஆன் |
ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும்
[திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]
-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள்.
முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய...
Read More →குர்ஆன் |
மூசா நபியும்... அதிசயப் பாம்பும்...
-S.H.M.இஸ்மாயில் ஸலஃபி
மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார்.
வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ...
Read More →நற்குணமும் நபியும்
வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03
-முஹம்மது சுபைர் முஹம்மதி ஃபிர்தௌஸி
யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குவீர்கள்?..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போற்றத்தக்க குணங்களில் உள்ள ஒரு உயரிய பண்பு, அவர்கள் சாதாரண பொது மனிதரின் மானம், மரியாதை கண்ணியத்தை காத்து நடப்பார்கள். அதை காப்பார்கள், மற்றவர்களுக்கு அதை தருவார்கள். சக தோழர் போன்றும் நடந்து கொள்வார்கள்.
பணம், புகழ், அழகு, பதவி இவற்றைப் பார்த்து அன்பு கொள்ளும் இக்காலகட்டத்தில் இவை எதுவுமே இல்லாத ஒரு சாதாரண கிராமவாசியை முஹம்மது நபி (ஸல்) எந்த அளவு நேசித்தார்கள் என்பது இன்றைய உலகிற்கு ஒரு முன் மாதிரியாகும். அவ்வாறான கலப்பற்ற நேசம்...
Read More →முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
-S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும்.
புனித மாதம்:
இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும்.
‘அல்லாஹ்விடம் நிச்சயமாக...
Read More →குர்ஆன் |
அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]
-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது!
யானை படை
அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன?
Read More →இஸ்லாம் அழைக்கிறது!
இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா?
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.
சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறுசிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.
இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன்...
Read More →குர்ஆன் |
திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01
-ஷைய்ஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி
காகத்தின் கதை!
“(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.”
“என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம்...
Read More →பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்
-S.H.M. இஸ்மாயில் ஸலபி
--------------------------------------------
மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும்.
உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
Read More →