கேள்வி 21: நிலநடுக்கம் வந்தால் தொழுகையை தொடரலாமா.?
Answer by admin On June 20, 2020
நிலநடுக்கம் மற்றும் பிற பேரிடர் நேரிடும்போது மார்க்கத்தில் தொழுகையை விட அனுமதி இருக்கிறது ஏனெனில் தனக்குத்தானே சிரமத்தை தேடிக் கொள்ளக்கூடாது என்பது மார்க்கத்தின் பொதுவான கட்டளை.,உதாரணமாக தொழுகையின்போது திடீரென நெருப்பு பத்தி எரிந்து நம்மை நெருங்கி விட்டாள் அதனை விட்டு விலகி செல்வதற்கான வழியை தேட வேண்டும் அதற்கு மாறாக நெருப்பு நம்மைப் பொசுக்கட்டும் என்றிருப்பது முறையாகாது. இடையூறு செய்யும் பொருளை நம்மை நாமே தேடிக் கொள்ளக்கூடாது அதிலிருந்து தற்காத்துக் கொள்வது நம்மீது கடமையாகும்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 03, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.