குர்ஆன்

September 05, 2023

சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்...

சுலைமான் நபியும்...

ஹுத்ஹுத் பறவையும்...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.”


“நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)”


“சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறியது.”


“அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (தேவையான) அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது.”


“அல்லாஹ்வை விட்டுவிட்டு சூரியனுக்கு சுஜூது செய்பவர்களாக அவளையும் அவளது கூட்டத்தாரையும் கண்டேன். ஷைத்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டி, அவர்களை (நேர்) வழியை விட்டும் தடுத்து விட்டான். எனவே, அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்.”


“வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகின்ற, மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் பகிரங்கப்படுத்துபவற்றையும் அறிகின்ற அல்லாஹ்வுக்கு அவர்கள் சுஜூது செய்ய வேண்டாமா?”


“(உண்மையாக) வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை. (அவன்) மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்.”


“நீ உண்மை உரைத்தாயா? அல்லது நீ பொய்யர்களில் இருக்கிறாயா? என்பதை நாம் அவதானிப்போம்” என (சுலைமான்) கூறினார்.


“எனது இக்கடிதத்தை எடுத்துச் சென்று, அவர்களிடம் அதைப் போட்டு விட்டு பின்னர் அவர்களை விட்டும் ஒதுங்கி, அவர்கள் என்ன முடிவு செய்கின்றனர் என்பதைக் கவனித்துப்பார் (என்றும் கூறினார்)”


“பிரமுகர்களே! நிச்சயமாக என்னிடம் சங்கையான ஒரு கடிதம் போடப்பட்டுள்ளது” என்று (ஸபஃ இளவரசி) கூறினாள்.


“நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அது, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமான அல்லாஹ் வின் பெயரால் என ஆரம்பிக்கின்றது.)”


“நீங்கள் என்னிடம் ஆணவம் கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாகவே என்னிடம் வாருங்கள். (என்று எழுதப்பட்டுள்ளது.)”


“பிரமுகர்களே! எனது விஷயத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நீங்கள் என்னிடம் நேரடியாகக் கருத்துச் சொல்லாத வரையில் எந்தவொரு விஷயத் தையும் முடிவு செய்பவளாக நான் இல்லை” என்று கூறினாள்.”


“அ(தற்க)வர்கள், ‘நாம் பலசாலிகளாகவும் பலமாகப் போராடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். முடிவு உம்மிடமே உள்ளது. எதை (எமக்கு) ஏவுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறினர்.


“நிச்சயமாக அரசர்கள் ஒரு கிராமத்தில் நுழைந்தால், அதைச் சீரழித்து விடுவார்கள். அக்கிராமத்தவர்களில் கண்ணிய மிக்கவர்களை இழிவானவர்களாக ஆக்கி விடுவர். இவ்வாறே இவர்களும் செய்வார்கள்” என்று கூறினாள்.”


“நிச்சயமாக நான் அவர்களுக்கு ஒரு அன்பளிப்பை அனுப்பி, தூதர்கள் என்ன முடிவுடன் திரும்புகின்றனர் என்பதைக் கவனிக்கப் போகின்றேன் (என்றும் கூறினாள்)”


“அவர்கள் சுலைமானிடம் வந்த போது, ‘எனக்குப் பொருளைக் கொடுத்து நீங்கள் உதவப் போகிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது, அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதை விட மிகச்சிறந்ததாகும். எனினும் உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்’ என்று கூறினார்.”


“அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களால் எதிர்கொள்ளமுடியாத படை களுடன் நிச்சயமாக நாம் அவர்களிடம் வந்து, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் இழிவடைந்தவர்களாக, அதை விட்டும் அவர்களை நிச்சயமாக நாம் வெளியேற்றுவோம் (என்றும் கூறினார்)”

(27 : 20-37)

Admin
777 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions