ஹதீஸ் எப்படி புரிவது ? -8 - அபூ அக்மல்
நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ்,
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தம் உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மின்பரில்) ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்மேடன்'' என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள், மக்களும் எறிந்துவிட்டனர்.
Read More →நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2)
கடந்த இதழில் இதே தலைப்பில் மனைவியரிடம் எஜமானர்கள்போல் நடந்து கொள்வது; மனைவி தனக்கு மாற்று கருத்து சொல்லவே கூடாது என்று எண்ணுவது; மனைவியின் ஆலோசனையை கேட்க மறுப்பது ஆகியவை சில கணவர்மார்கள் செய்யும் தவறுகள் என்பதைப் பார்த்தோம்.
இதேபோல் இன்னும் சில தவறுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று மனைவியின் சிரமமான வேலைகளில் கணவன் ஒத்தாசை செய்யாமலிருப்பது. மனைவி சமையலறையில் வேலையில் இருக்கும்போது தொட்டிலில் தூங்கும் குழந்தை விழித்து அழுதால் கணவன் தொட்டிலை ஆட்டிவிட வேண்டும். அல்லது பிள்ளையை தூக்கி அமைதிப்படுத்த வேண்டும்.
Read More →நல்லோரும் செய்யும் தவறுகள் - 6
மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்
பண்பாட்டிலும் செயல்பாட்டிலும் நல்லவர்களாக இருப்பவர்களில் சிலர், குறிப்பிடத்தக்க தவறுகளை செய்கிறார்கள். அப்படிபட்ட தவறுகளை இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
Read More →ஹதீஸ் எப்படி புரிவது? - 7
மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil
ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படர தொடங்கி விட்டால் உங்கள் சிறுவர்களை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில் அப்போதுதான் (பூமியெங்கும்) ஷைத்தான்கள் பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும் (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைக் சொல் உன் தண்ணீர் பையை சுறுக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை.(அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையேனும் குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (புகாரி 3280, 3304)
முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான்
மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil
தற்காலத்தில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இழிவு படுத்துவதற்காக இஸ்லாத்தின் விரோதிகள் பலவிதமான வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
Read More →இமாம் ஷாபிஈ (ரஹ்)
-அப்துர்ரஹ்மான் மன்பஈ
சத்திய இஸ்லாத்தின் மார்க்க கல்விக்கு சேவையாற்றிய வழிகாட்டிகளில் முதன்மையானவர்களில் ஒருவர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்.
இமாம் ஷாஃபிஈ அவர்களின் முழு பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ அல் குரஷி என்பதாகும்.குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர். இமாமவர்களின் வம்சாவழி தொடரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வம்சாவளி தொடரும் நபியவர்களின் நான்காம் தலைமுறை பாட்டனாரான அப்து மனாஃப் என்பவருடன் சந்திக்கின்றது.
பிறப்பும் சிறுபிராயமும்:
Read More →ஹதீஸ் எப்படி புரிவது?
ஹதீஸ் - 6
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ருப் போரில் கொல்லப்பட்ட இறை நிராகரிப்பாளர்கள் போடப்பட்டிருந்த) பத்ரின் பாழடைந்த கிணற்றுக்கருகில் நபி(ஸல்) அவர்கள் நின்று, “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாக பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம், மரணித்தவர்களையா அழைத்து பேசுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “நீங்கள் அவர்களை விட நன்றாக செவியேற்பவர்கள் அல்ல. ஆனாலும் அவர்களால் பதிலளிக்க முடியாது” என்றார்கள்.
(புகாரி 1370).
Read More →மகத்தான வழிகாட்டிகள்-2
இமாம் மாலிக்(ரஹ்)
நமது முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய மாபெரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர் இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள். நான்கு பெரும் இமாம்களில் காலவரிசைப்படி இரண்டாமவர். அன்னார் மதீனா நகரில் ஹிஜ்ரி 93 ஆம் வருடத்தில் பிறந்தார்கள்.
Read More →