“நல்ல பெண்கள் என்போர் பணிந்து நடப்பவர்கள், மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹுவின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களை) பேணிக் காத்துக்கொள்வார்கள்.” அல்குர்ஆன் 4:34
காதல் என்பது கணவன் மனைவி ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நேசத்தைக் குறிக்கும் வார்த்தையாகும். அதுபோல கணவன் மனைவியாக ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்ப்படும் நேசத்தையும் குறிக்கும். இந்த இரண்டாவது வகை காதல் பற்றியே இந்த கட்டுரை.
காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை
சீர்கெட்ட சமூக அமைப்பில் புரிந்து வைக்கப்பட்டுள்ள அல்லது புகுத்தப்படுகிற காதலை புறந்தள்ளிவிட்டு இன்னாரை திருமணம் செய்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒருவர் கொள்ளும் நேசம் – காதல் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
Read More →அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்…
இறையருள் நிறைக!
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்கள் சகோதரன் எழுதுவது. நலம், நலமே பெறுக!
“அவன்தான் கர்ப்பக்கோளறைகளில் தான் நாடியபடி உங்களை வடிவமைக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கிறான்.” அல்குர்ஆன் 3:6
அரவாணித்தனம் ஒரு குறை என்றாலும் அத்தன்மை கொண்டவர்கள் தாழ்வாக பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சரியா? சமூகத்தில் அவர்களுக்கிருக்கும் இன்றைய நிலைதான் தொடர வேண்டுமா?
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil
டிசம்பர் 6 ! 1992 ம் வருடம் இதே நாளில் ராமர் பிறந்த இடம் என்று பொய் கூறி பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் இந்துத்துவ தீவிரவாதிகள்!
தீவிரவாதிகளின் பித்தலாட்டத்தை நாம் எதிர்க்கும் அதே வேளையில் பொதுவாக நல்ல இந்து மக்களும் இறைவனின் அவதாரமாக நம்பியிருக்கும் இராமன் குறித்த சம்பவங்களை கவனிக்கும் போது திருக்குர்ஆனிலும் பைபிளிலும் புகழ்ந்து பேசப்படும் இறைத்தூதர் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தான் இவர்களால் இராமன் என்று கூறப்படுகிறார்கள் என்று சொல்ல அதிக வாய்ப்புள்ளது.
Read More →டிசம்பர் மாதம் 25ம் தேதியை இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் எனக் கூறி கிருஸ்துமஸ் தினம் கொண்டாடுகிறார்கள். கிருஸ்தவ சகோதரர்கள். அந்த நாள் தான் உண்மையிலேயே அவர்கள் பிறந்த நாள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது முறையானதல்ல.
ஆனால் நாம் அந்த சர்ச்சையை விட்டுவிட்டு கிருஸ்தவ சகோதரர்கள் ஈசா நபி பற்றி கொண்டிருக்கும் அடிப்படை நம்பிக்கை சரிதானா என்று பார்ப்பதே முக்கியமனது
Read More →அத்தஹியாத் இருப்பில் சிலர் விரலசைப்பதும் சிலர் அசைக்காமல் இருப்பதுமான நடை முறை உம்மத்தில் இருந்து வந்தது.
குர்ஆன் ஹதீஸ் வழியில் பிரச்சாரங்கள் செய்த ஷைக் அல்பானி(ரஹ் ) அவர்கள் விரலை அசைப்பது நபிவழி என்று தவறுதலாக புரிந்து கொண்டு அதைப் பிரச்சாரமும் செய்தது தான் மக்கள் மத்தியில் அது தீவிரமாக பரவ காரணமானது. எவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் மனிதர் என்ற அடிப்படையில் சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான்.
Read More →“நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும்”
இது 14-03-2013 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு இச்செய்தியில் தனப்பிரியா என்ற நான்கு வயது சிறுமியை தெருநாய் கடித்து இழுத்துச் சென்றதில் அச்சிறுமி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், தனப்பிரியவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் முகச்சீரமைப்பு உட்பட சிறப்பான சிகிச்சயை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாய்களால் ஏற்படும் இது போன்ற கொடுமையான பாதிப்பு புதிதல்ல. பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள நடந்து கொண்டுதானிருக்கின்றன. சில சம்பவங்களில் கடிபட்ட சிறுவர் சிறுமியர் இறந்தும் போயிருக்கிறார்கள். நாய்க்கடியால் அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி சிறுவர் சிறுமியர் தான் என்பது மிகவும் வேதனையான விஷயம்.
Read More →