முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்

ஆய்வுகள் | மற்றவை by -திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான் On Aug 20, 2023 Viewers: 312


முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்

முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்

-திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்  


      கல்வியிலும் அரசுப் பணிகளிலும் பொருளாதாரத்திலும் நமது இந்தியாவில் பின்தங்கிய சமூகங்களில் எல்லாம் மிக பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். 

      இந்த நிலையை மாற்றுவதற்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியில் முன்னேற்றம் அடைந்து விட்டால் மற்றவற்றிலும் முன்னேற்றம் அடைந்து விடலாம்.

       இந்த முடிவின் அடிப்படையில் நம் சமுதாயத்தில் பலரும் பள்ளிக் கூடங்களையும் சிலர் கல்லூரிகளையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த இரண்டு  மூன்று தசாப்தங்களில் பல கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. 

      பின்‌தங்கியிருக்கும் இந்த சமுதாயம் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆனால் சமுதாயத்துக்கு தேவையான பலன் கிடைக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியதாக உள்ளது.

        பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட பழைய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் முஸ்லிம்களுக்கும் மற்ற மக்களுக்கும் சிறப்பாக கல்வி சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிகச் சில நிறுவனங்கள் நோக்கத்திலிருந்து தடம் மாறியிருந்தாலும். 

        பிற்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்விக்கூடங்களில் அதிகமானவை தவறான ஆட்களின் கைகளில் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வகிப்பவர்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். 

       குறிப்பாக பள்ளிக்கூடங்கள் நடத்துபவர்களில் அதிகமானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த பள்ளிக்கூடங்களில் படிப்புத் தரம் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது. பிற சமுதாயத்தவர் நடத்தும் பள்ளிகளோடு ஒப்பிடும்போது மிகவும் கீழ்நிலையில் இருப்பதை காண்கிறோம். 

       ஆனால் இந்த தரம் குறைந்த கல்விக் கூடங்களை நடத்தும் முஸ்லிம் உரிமையாளர்கள் மட்டும் லட்சாதிபதிகளாகவும் கோடீசுவரர்களாகவும் உயர்ந்து கொண்டிருப்பதை காண்கிறோம்.

         பின்தங்கிய இந்த முஸ்லிம் சமுதாயத்தின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று இவர்களின் கல்விக்கூடங்களில் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் பிற சமுதாய கல்விக் கூடங்களின் பிள்ளைகளோடு ஒப்பிடும்போது பெரிய பின்னடைவு இருப்பது தெரிகிறது. (திறமையும் கூடுதல் ஆர்வமும் உள்ள மிக குறைந்த எண்ணிக்கயிலான பிள்ளைகளை தவிர.)

       புறக்கணிப்பு ... 

             முஸ்லிம் கல்வி நிலையங்களில் குறிப்பாக பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக உள்ளது. அப்படி குறைந்த அளவில் உள்ள முஸ்லிம் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பும் முக்கியத்துவமும் இல்லை என்பதும் பல முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களின் குறைப்பாடாக உள்ளது. இது பல இடங்களில் சாதாரணமாக வெளிப்படையாக தெரிகிறது.

           நம் சமுதாயத்தை சேர்ந்த கல்வியாளர்கள் முனைவர் பட்டம் பெற்று வந்தால் கூட நம்மவர்களின் கல்விக் கூடங்கள் பலவற்றில் உரிய மரியாதை கொடுத்து பள்ளி முதல்வர் போன்ற பொறுப்புக்கள் (அநேக இடங்களில்) வழங்கப் படுவதில்லை. 

        முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதியில் இஸ்லாமிய பெயரில் டிரஸ்ட் ஏற்படுத்திக் கொண்டு கல்விக் கூடத்துக்கு இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொள்கிறீர்கள். பெரும்பாலான மாணவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் கல்விக்கூடத்தில் முதல்வர் உட்பட ஆசிரியர்களெல்லாம் மாற்று சமூகத்தவராக இருக்கிறார்கள். 

       முஸ்லிம்களுக்கு சேவை செய்வதாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமல்லவா? கல்விச் சேவை செய்ய வரும் முஸ்லீம்களை ஊக்குவித்து முன்னேறச் செய்ய வேண்டுமல்லவா? 

       முஸ்லிம்களுக்கு கல்வி கற்பிக்கிறோம் என்று அவர்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளும் கல்விக்கூடங்களின் உரிமையாளர்கள் பலர் கல்விப் பணியில் ஆர்வமுள்ள முஸ்லிம்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதில்லை.

        அரசு உதவி பெரும் சில பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் சிலர் தாம் கேட்கும் பணத்தை மாற்று மதத்துக்காரர் கொடுத்தால் தகுதியுள்ள முஸ்லிமை புறக்கணித்து விட்டு மாற்று மதத்தவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நியமனம் செய்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய துரோகம்?

       கிழக்கு கடற்கரை சாலையில் புராதனமான முஸ்லிம் ஊரில் நடந்து கொண்டிருக்கும் கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் பணிக்கு அதிக பணம் கொடுப்பவரை நியமிக்கும் போக்கு உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் யார் என்பதை பொருட்படுத்துவதில்லையாம்.  

         இப்படி பண வெறி பிடித்து அலைவதால் தங்கள் முன்னோர் நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்து சிறப்பாக நடத்திய கல்லூரியை இப்போதுள்ளவர்கள் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. 

        சில பழைய கல்லூரிகள் முஸ்லிம் சமூகத்திற்கு சிறப்பான முறையில் கல்வி சேவையாற்றிக் கொண்டிருப்பதையும் நாம் பாராட்டி நன்றி கூற வேண்டும்.

      ஆக முஸ்லிம்களில் கல்வி நிறுவனம் நடத்துபவர்கள் – குறிப்பாக பள்ளிக் கூடங்கள் நடத்துபவர்கள் நம்முடைய சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

       மற்ற சமுதாயத்தவர் நடத்தும் கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுகிற அளவுக்கு கல்வித்தரத்தை உயர்த்த முய்ற்சிக்க வேண்டும். 

        முஸ்லிம் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும். 

       பணம் அதிகம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் உயர்வையும் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.  

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE