தற்கொலை தீர்வாகுமா?

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Sep 11, 2014 Viewers: 2080


தற்கொலை தீர்வாகுமா?

 தற்கொலை தீர்வாகுமா?

வாழ்க்கையில், தோல்விகள், சோதனைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், அவமானங்கள் என்று ஏதேனும் ஏற்படும் பொது அதற்குத் தீர்வாக சிலர் தற்கொலையைத் தேர்வு செய்துகொள்கிறார்கள்.

தெய்வநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் இல்லாதிருப்பது அல்லது இவ்விரு நம்பிக்கையிலும் பலவீனம் இருப்பதுதான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம்.

எந்த கடுமையான சிரமத்துக்காகவும் தற்கொலையைத் தேர்வு செய்யக் கூடாது. ஆனால் இன்று மிகச் சிறிய சோதனையைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் தற்கொலையை நாடும் நிலை பரவி வருகிறது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரில் சிலர் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்துகொள்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பள்ளிக்கூடத் தேர்வில் தோல்வியடைவது ஒன்றும் அத்தனைப் பெரிய தோல்வி அல்ல. ஆனாலும் இதற்கு பெரியவர்கள் தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள். தோல்வி, அவமானம் என்று வரும்போது சில பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதை அறியும் சிறுவர்கள் தமக்கும் தோல்வி, அவமானம் என்று வந்தால் தற்கொலை செய்து கொள்வது தமக்குத் தீர்வைத் தரும் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். இது பெரிய அவலம்!

செப்டம்பர் 10 தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஊடகங்களில் வெளிவரும் தற்கொலைப் பற்றிய செய்திகள் மூலமாகவே தற்கொலைச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. அதாவது தற்கொலை குறித்த செய்தியை வெளியிடும் ஊடகங்கள் தற்கொலை நடந்த முறை பற்றி விரிவாக விளக்கக் கூடாது. அத்துடன் தற்கொலை செய்துகொள்வது தவறு என்பதையும் அச்செய்தியுடன் குறிப்பிட வேண்டும்.

உலக அளவில் நடக்கும் தற்கொலை குறித்த புள்ளி விவரத்தையும் உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகத்திலேயே மிக அதிகமாக கயானாவில் ஒரு லட்சம் பேரில் 44.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மற்ற நாடுகள்: ஒரு லட்சம் பேரில்வடகொரியா(38.5), தென்கொரியா(28.9), இலங்கை(28.8), லிதுவேனியா(28.2), நேபாளம், தான்சானியா (24.9), புரூண்டி(23.1), இந்தியா(21.1), தெற்கு சூடான் (19.8), ரஷியா, உகாண்டா(19.5), ஹங்கேரி (19.1), ஜப்பான் (18.5) பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் அதிகம் தற்கொலை நடைபெறக்கூடிய நாடுகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் நம் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக தற்கொலைகள் நடக்கின்றன என்பது இன்னொரு முக்கியத் தகவலாகும்.

தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்:
எல்லா மனிதருக்கும் உயிர் மேல் ஆசை உண்டு. ஆனால் துன்பம் ஏற்படும்போது விரக்தியில் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் சிலர்.

எத்தனையோ பெரும் சோதனைகளையும் அனுபவித்தவர்கள் சகிப்புத்தன்மை, நிதானம் ஆகியவற்றால் பின்பு நல்வாழ்வு வாழ்கிறார்கள். தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவமானம், சோதனை போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்காக தற்கொலை செய்பவர்கள் அவற்றை சகிப்புத் தன்மையுடன் எதிர்கொண்டு வாழ்ந்தால் பிற்காலத்தில், தான் நல்வாழ்வு வாழ்வதுடன் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்பவனாக வாழலாம்.
உதாரணமாக, தேர்வில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலைக்கு முயற்சிக்கும் ஓர் இளைஞர், அம்முயற்சியைக் கைவிட்டு விட்டு தன் நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளில் உழைத்தால் அவனுக்கு எதிர்கால வாழ்வு நல்வாழ்வாக அமைவதுடன் தன் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு உதவியாகவும் இருக்க முடியும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு பல நன்மைகளையும் செய்ய முடியும்.

இறைவழிகாட்டுதல்

கடும் சோதனை வரும் போது, இது என்னைப் படைத்த என் இரட்சகனின் முடிவு என்பதை எண்ணி பொறுமையாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
ஒருபோதும் அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது, அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்! என்று நீர் கூறும்.” [அல்குர்ஆன் 9:51]

எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கு விதித்தது தான் நடக்கிறது. அவன் விதிக்கு அப்பாற்பட்டு எதுவும் நடக்காது என்பதை உறுதியாக நம்பி, மேற்கண்ட இறைவசனத்தில் கூறப்பட்டதை தனக்குள் சொல்லிக் கொண்டு அதில் உறுதியாகவும் இருக்கும் ஒருவரை எவ்வளவு பெரிய சோதனையும் மனம் தளரச் செய்துவிடாது. தற்கொலை எண்ணமும் தோன்றாது.

அதே போல், எல்லா நிலையிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். நமது முயற்சியும் உழைப்பும் நமது நாட்டம் நிறைவேறுவதற்காக நாம் செய்யும் வெளிப்படையான செயல்பாடாகும். ஆனால் அதன் முடிவை நான் ஏற்பேன் என்ற முடிவோடு இருப்பதேதவக்குல்எனும் அல்லாஹ்வை சார்ந்திருக்கும் தன்மை. இதுவும் எத்தனை பெரிய சோதனையையும் தாங்கிக் கொள்ளும் வலிமையை மனிதருக்குத் தருகிறது. மேற்கண்ட வசனத்தின் இறுதியில், “இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்களாக!” என்று அல்லாஹ் கூறுகிறான். இக்கருத்தில் பல்வேறு இறைவசனங்கள் உள்ளன.

தற்கொலை ஒரு பெரும்பாவம், “உயிர்இறைவன் கொடுத்தது, அதைத் தானாக மாய்த்துக் கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் கருணையுள்ளவனாக இருக்கிறான்.
எவரேனும் வரம்புமீறி அநியாயமாக இதைச் செய்தால் விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்.” [அல்குர்ஆன் 4:29,39]

ஒருவர் தற்கொலை செய்துகொண்டு தன் உயிரைத் தான் மாய்த்துக் கொள்கிறார் என்றால் கூட அதுவும் மறு உலக வாழ்வில் நரகத்தில் நுழைவதற்குக் காரணமாகக் கூடிய பெரும்பாவம் தான்.
உயரத்திலிருந்து உதித்து அல்லது நஞ்சு உண்டு அல்லது ஆயுதத்தால் தன்னைத்தானே குத்திக் கொண்டு இப்படி எந்த விதத்தில் தற்கொலை செய்து கொண்டாலும் அப்படிப்பட்டவர் நரகில் போடப்பட்டு அதே விதத்தில் நிலையாக வேதனை செய்யப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி 5778)

ஆகவே இறைவன் மீதும் அவனது விதி மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்து வாழ்வதும், தற்கொலை நரகில் சேர்க்கும் பெரும்பாவம் என்பதை உணர்ந்து வாழ்வதும், தற்கொலைகள் நடைபெறாமல் தடுக்க காரணமாக அமையும்!

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE