கேள்வி:

கேள்வி 57: CAA, NRC, NPR போராடக் கூடியவர்கள் கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிந்தும் தாடி இல்லாமலும் இருக்க கூடியவர்களாக இருக்கிறோம் எங்களுக்கு வெற்றி கிடைக்குமா?

Answer by admin On July 18, 2020

பதில்:

பொதுவாக வெற்றி என்பது அல்லாஹ்வின் உதவியினால் அமைவதாகும் இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம் மீது கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான் நாம் ஈமான் கொண்டவர்களாக இருப்பின் உதவி செய்வது அல்லாஹ் தன் கடமையாக குறிப்பிடுகின்றான். தாடி இல்லாமலும் கரண்டைகால் கீழ் ஆடை அணிவதும் நபி(ஸல்) அவர்களின் முறைக்கு மாற்றமானது. அவ்வாறான மாற்றம் தொடர்ச்சியாக இருப்பின் அவை ஈமானுடைய பலவீனம், குறைகளாக பார்க்கப்படும் இறைநம்பிக்கையில் குறை  இருப்பதால் அல்லாஹ்வின் உதவியும் தாமதமாகும் அல்லது பிற்படுத்தப்படலாம். மேலும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை அலட்சியப்படுத்துவது அல்லாஹ்வின் உதவி இல்லாமலும் போக வாய்ப்பிருக்கிறது ஆகவே இயன்றவரை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய சுன்னத்களை நாம் பேண வேண்டும் அவ்வாறிருத்தல்  அதன் மூலம் நாம் ஈமானின் நிறைவானவர்களாக ஆகமுடியும். அப்போது அல்லாஹ் குர்ஆனில் கூறியது போல ஈமானில் தகுதி உடையவர்களாக இருப்பின் அல்லாஹ் உதவி செய்வான் . அதன் மூலம் அல்லாஹ் நமக்கு வெற்றியையும் தருவான்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 07, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.