கேள்வி 47: பெண்கள் கடமையான குளிப்பு குளிக்கும் போது அவர்களது தலைமுடி முழுவதும் நனைதல் வேண்டுமா அவ்வாறு நனையாமல் இருந்தால் குளிப்பு கடமை கூடுமா.?
Answer by admin On July 12, 2020
பொதுவாக குளிப்பு கடமையில் இருபாலர்களுக்கும் தலைமுடி முழுவதுமாக நனைதல் வேண்டும் மேலும் பெண்களுக்கு சில சலுகைகள் உள்ளது அவற்றில் அவர்கள் இறுக்கமான சடை பின்னி இருந்தாள் அவர்கள் மூன்று முறை தலை மேல் தண்ணீரை ஊற்றினால் போதுமானது இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடத்தில் ஒரு பெண் கேட்டபோது குளிப்பு கடமையின் போது நான் முடியின் பின்னலை இறுக்கமாக கட்டுபவள் பெருந்தொடுக்கை நீக்க நான் அதனை அவிழ்க்க வேண்டுமா அதற்கு நபி(ஸல்) அவர்கள் இரு கைகள் நிறைய நீர் எடுத்து அதனை மூன்று முறை தலையில் ஊற்றினால் போதுமானது என்று பதில் கூறினார்கள் சடை பின்னி இருந்தாள் அவசியமில்லை அவிழ்க்கப்பட்டிருந்தாள் முழுமையாக தலைமுடியில் தண்ணீர் ஊற்றி முழுவதுமாக நனைய வேண்டும் என்பதை இந்த ஹதீஸில் விளக்குகிறது.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 31, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.