கேள்வி:

கேள்வி 60:நோன்பு வைக்காதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஃபித்ரா கொடுக்க வேண்டுமா?

Answer by admin On July 18, 2020

பதில்:

ஸகாதுல் ஃபித்ர் கொடுத்துதான் ஆகவேண்டும். ஏனென்றால் நபியவர்கள் இந்த  ஸகாத் ஃபித்ராவை பற்றி சொல்லும் பொழுது முஸ்லிமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அடிமைகளின் மீதும் ஸகாத் ஃபித்ர் கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது கூறுகின்றார்கள். 


எனவே ஒருவரோ அல்லது சிலரோ தன் வீட்டில் நோன்பு வைக்கவில்லை என்றாலும் அவர் கண்டிப்பாக ஏழைகளுக்கு ஸகாத்துல் ஃபித்ர் கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.


 ரமலான் நாட்களில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்காகவும் கொடுக்க வேண்டும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 46, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.