கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?
பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199) மேலும் படிக்க...
கேள்வி 32: பெண்களுக்கான மாதவிடாய் உதிரப்போக்கு நின்ற நிலையில் குளிக்காமல் தொழுகலாமா.?
ஒரு பெண்ணிற்கு தன்னுடைய அந்தந்த மாதத்திற்கான மாதவிடாய் உதிரப்போக்கு எப்பொழுது முழுமையாக நின்றுவிட்டது என்று தெரிகிறதோ அப்பொழுது அவர்கள் மேல் குளிப்பு கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
கேள்வி 33: வங்கி பரிவர்த்தனையில் பிடிக்கும் சேவை தொகையை நமக்கு வரக்கூடிய வட்டியில் கழித்துக்கொள்ளலாமா?
வங்கிகளில் மாதாந்திர வட்டி முறைப்படியே கணக்குப் பார்த்து கொடுப்பதனால் நாம் அதனை உபயோகப்படுத்துவது வட்டியை பயன்படுத்தியதற்கு சமமாகும். மேலும் படிக்க...
கேள்வி 34: குடும்பத்தில் பிறையைப் பற்றின இரண்டு விதமான கருத்து காரணத்தினால் பெருநாள் தொழுகையை எப்படி நிறைவேற்றுவது? ஒருவர் பெருநாள் கொண்டாடும் சமயம் வீட்டில் மற்றொருவர் நோன்பு வைக்கலாமா.?
இந்த ஊரடங்கு சமயத்தில் மற்ற வஃக்த் தொழுகையும் பெருநாள் தொழுகையும் வீட்டிற்குள்ளேயே நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் கருத்து வேறுபாடு அடிப்படையில் ஒரு நாள் முன்னர் நோன்பு நோற்றவர் தனக்கு பெருநாளாக இருப்பினும் அந்நாளில் அவர் நோன்பு நோற்காமல் இருக்கவேண்டும். மேலும் படிக்க...
கேள்வி 35: பிறந்தநாள் வாழ்த்துக் கூறலாமா? பிறந்தநாளன்று கொடுக்கப்படும் இனிப்பை சாப்பிடலாமா?
இஸ்லாத்தின் அடிப்படையில் பிறந்தநாளை கொண்டாட ஆதரிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை. தவறில்லை என்ற காரணத்தினால் நாம் அதனை மேம்படுத்திக் கொள்வது கூடாது மேலும் படிக்க...
கேள்வி 36: ஈமான் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.?
அல்லாஹுத்தஆலா நமது மீது கடமையாக்கப்பட்ட தொழுகையும் , நஃபீலான தொழுகையை அதிகமாக பேணுதலும், மேலும் ஸகாத், தர்மம், திக்ரு இதுபோல நற்செயல்கள் செய்வதன் மூலமாகவும் ஈமானை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் படிக்க...
கேள்வி 37: அத்தஹியாத்தில் ஆட்காட்டி விரலை அசைக்கலாமா கூடாதா?
அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பற்றி நஸயீ ஹதீஸில் ஒரு ஸஹாபி கூறுவது ரஸூல்(ஸல்) அவர்கள் அத்தஹியாத்தில் இருப்பில் விரலை அசைத்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் படிக்க...
கேள்வி 38: ஒருவர் மற்றொருவர் மூலமாக ஸலாம் சொல்லி அனுப்பினாள் அதற்கு எவ்வாறு பதில் கூற வேண்டும்?
இன்னொருவர் மூலமாக ஸலாம் சொல்லி அனுப்பபடும் போது அதற்கு பதிலாக நாம் மேலும் படிக்க...
கேள்வி 40: LIC Policy போடலாமா?
LIC POLICY போன்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பலரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்து அதில் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அல்லது அவர்கள் எந்த நோக்கத்திற்காக பணத்தை மேலும் படிக்க...
கேள்வி 41: கருவை கலைப்பது இஸ்லாம் ஆதரிக்கிறதா?
இஸ்லாத்தில் கருவைக் கலைப்பது ஆதரிக்கப் படவில்லை மற்றும் வளர்ந்து வரும் கரு உயிர் என்ற அடிப்படையில் அதை கலைப்பது குற்றமும் ஆகும். மேலும் படிக்க...
கேள்வி 42: CAROM BOARD விளையாடலாமா கூடாதா?
ஹதீஸ்களில் கல்லை சுண்டி விளையாடக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) கல்லை சுண்டி விளையாடுவதால் அது எந்த எதிரியும் தாக்க போவதில்லை. ஆனால் தவறுதலாக யாருடைய கண்களையாவது பாதித்து விடும் அதனால் அதை விளையாடுவதை ரசூலுல்லாஹ் தடுத்தார்கள் என்று ஹதீஸ்களில் ஆதாரபூர்வமாக பதிவாகி உள்ளது. மேலும் படிக்க...